Thursday 21 June 2018

மாணவர்களின் சோர்வைப் போக்கி ஞாபக சக்தியை மேம்படுத்தும் உணவுகள்! 

மாணவர்களின் சோர்வைப் போக்கி ஞாபக சக்தியை மேம்படுத்தும் உணவுகள்! #Infographic



திகாலை எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்புவது முதல், சிறப்பு வகுப்புகள், டியூஷன் என எல்லாவற்றையும் முடித்து வீடு திரும்புவது வரை இன்றைய மாணவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் உடற்சோர்வைப் போக்கவும், மனச்சோர்வு அகற்றி ஞாபகத் திறனை மேம்படுத்தவும் சரியான, சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் பொறுப்பு அதிகமாகிறது. 
மாணவர் உணவுகள்
சத்தான உணவுகளைச் சாப்பிடாததால் மாணவர்கள், சோர்வு, மனஅழுத்தம், உடல்சூடு, ரத்தச்சோகை உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆட்படுகின்றனர். எனவே, சரிவிகிதமான உணவுகளை பெற்றோர் மாணவர்களுக்குத் தரவேண்டும். 
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எப்போதெல்லாம் சாப்பிட வேண்டும்? என்று  உணவியல் நிபுணர் யசோதரை கருணாகரனிடம் கேட்டோம்.
``மாணவர்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள ஞாபகசக்தி மிகவும் அவசியம். அவர்கள் சாப்பிடும் உணவு சுத்தமானதாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். காலையில் எழுந்து பல் துலக்கியதும் சூடான பசும்பால் சாப்பிடலாம். பாக்கெட் பாலைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சத்துமாவுப்பொடிகளை சாப்பிடக் கொடுக்க வேண்டாம். கேழ்வரகுக் கஞ்சி, முளைகட்டிய பாசிப்பயறு போன்றவற்றை அதிகாலை சாப்பிடலாம். இதன்மூலம், உடலுக்குத் தேவையான சத்துகளை இயற்கையாகப் பெற முடியும். பாலிலுள்ள அதீத கால்சியம் எலும்பை உறுதியாக்குவதுடன் உடலுக்கும் பல நன்மைகளைக் கொடுக்கும். 
காலை உணவு முக்கியம்
இன்றைய அவசர உலகில் பெற்றோர் எந்திரம்போல் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதனால், ரெடிமேடு உணவுகளைத் தயாரித்து அவற்றைப் பிள்ளைகளின் தலையில் கட்டிவிடுகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ரெடிமேடு உணவுகளில் கால்சியம் உள்ளிட்ட சத்துகள் இருப்பதில்லை. அதுமாதிரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரித்தல், ஹீமோகுளோபின் குறைபாடு, ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாணவர்களின் உடல்நிலைக்கேற்ற  உணவுகளை கொடுக்கவேண்டும். இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளோடு பயறு வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். முளைகட்டிய பயறுகளில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலை வலிமைப்படுத்தவும் உடல் சூட்டைத் தணிக்கவும் பயன்படும். பூரி, பஜ்ஜி உள்ளிட்ட எண்ணெய் உணவுகளை காலையில் கொடுக்க வேண்டாம். 
பெரும்பாலும் காலை உணவை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துவிட வேண்டும். காலை உணவுதான் ஆற்றல் மிகுந்ததாக இருக்கும். நாள் முழுவதும் சோர்வில்லாமல் படிக்கவும் எழுதவும் விளையாடவும் பயன்படும். எனவே, மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவும் உணவுகள்
மதிய உணவில் சேர்க்க வேண்டியவை
மதிய உணவில் கேரட், பீட்ரூட்,வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் `வைட்டமின் ஏ’, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கவும் அதிகரிக்கவும் பயன்படும். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வெந்தயக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளையும் மதிய உணவில் சேர்க்க வேண்டும். 
கீரைகளில் உள்ள `வைட்டமின் ஏ’ சத்து பார்வையை மேம்படுத்தும். எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோல் நோய்கள் வராமல் தடுக்கும். வெந்தயக்கீரையிலுள்ள `ஒமேகா 3’ எனும் சத்து, அறிவு வளர்ச்சியைத் தூண்டும். இதை அதிகமாக மாணவர்களுக்குத் தர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையாவது கேரட், பீட்ரூட், வாழைத்தண்டு,வாழைப்பூ,பாகற்காய் எனப் பல்சுவை கொண்ட காய்கறிகளையும் சாப்பிடக் கொடுக்கலாம். 
இறைச்சி
மாணவர்கள் இனிப்புகளை விரும்பி உண்கின்றனர். சாக்லேட் மற்றும் வெள்ளை சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட தின்பண்டங்கள் அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. இது ஆரோக்கியமான உணவு இல்லை. வெள்ளைச் சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்தினால் அது நரம்புகளைப் பாதிக்கும். அதற்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து கொழுக்கட்டை அல்லது அடையாகச் செய்து கொடுக்கலாம். இது, உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற்றுத்தரும். இதை பிற்பகல் மூன்று மணிக்கு மேல் சாப்பிடக் கொடுக்கலாம்.  
இரவில் என்ன சாப்பிடலாம்?
 அரிசி சாதத்துடன் நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை உண்ணத்தர வேண்டும். கீரை செரிக்க அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படும். எனவே இதை இரவில் உண்ணக்கூடாது. 
உணவியல் நிபுணர் யசோதரை கருணாகரன்மாதத்துக்கு இரண்டு முறையாவது இறைச்சி, மீன் போன்றவற்றில் செய்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதிலுள்ள ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 போன்றவை அறிவு வளர்ச்சிக்கு உதவும். இரவு உணவை 7.30 முதல் 8.00 மணிக்குள் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட உடனேயே, உறங்கச் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கோடை, மழைக்காலத்துக்கேற்ற உணவுகள்
கோடைக்காலங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக்காலங்களில் உடலிலுள்ள பெரும்பாலான நீர், வியர்வையாக வெளியேறிவிடும். இதனால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை ஈடுகட்ட நீர்க் காய்கறிகளான பீர்க்கன்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, புடலங்காய் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும். இவை நரம்புகளை வலுவடையச் செய்து, மூளையை சுறுசுறுப்பாக்கும். இளநீர், மோர், நீராகாரம் போன்ற திரவ உணவுகளையும் தேவையான அளவு அருந்த வேண்டும். இந்தவகையான உணவுகள் உடலின் ஆற்றலை மேம்படுத்தும்.
மழைக் காலங்களில் வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், முளைக்கட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம். இதனால் ரத்த அழுத்தம், உடல் சூடு, உடல் எடையைக் குறைக்கலாம். ரத்தச்சோகையை சரிசெய்யவும் முடியும். ஆகவே, சரியான நேரத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலே மாணவர்கள் நல்ல நினைவாற்றலுடன் விளங்க முடியும். அதன்மூலம் எந்த வகையான தேர்வுகளிலும் அவர்கள் வெற்றிவாகை சூடலாம்" என்கிறார் யசோதரை கருணாகரன். 

Saturday 6 May 2017

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்! #GoodParenting


குழந்தை
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும். 
3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள். 
குழந்தைகள்
4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது? உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள். கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள். 
5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். 
6. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள். 
7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ, குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள், 'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும். 
குழந்தை
8. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள். 
9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.
10. 'இவ்வளவு பெரியவனா இருந்தும் இப்படி செய்யுறியே, ஆள்தான் பெருசா வளர்ந்திருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். குழந்தைகள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் மகிழ்ச்சி, துக்கத்தை அவர்கள் வழியில் வெளிப்படுத்த அனுமதியுங்கள். குழந்தை விரும்பும் கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கும்போது படுக்கையில் ஏறிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால், நீங்களும் கொண்டாடுங்கள். மாறாக, நீங்கள் கோபப்படுவதால், அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மை உண்டாகும். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையைத் தன்னம்பிக்கையுடன், மகிழ்ச்சியாக உலகத்தை எதிர்கொள்ள உறுதுணையாக இருங்கள்

குழந்தைகள் முன்பு சண்டையிடுவது தவறு... ஏன் தெரியுமா?



குழந்தைகள்

திகபட்ச அன்பும் உரிமையும்கொண்டது தம்பதியரின் உறவு. ஆனால், இருவரில் ஒருவர் சிறு தவறு செய்யும்போது, 'அது எனக்குத் தெரிந்துவிட்டது. அதை உனக்குப் புரியவைக்கிறேன் பார்' என்று உடனடியாக வரிந்துகட்டி இறங்கும்போதுதான் சண்டை ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து வார்த்தைகள் தடித்து விழுகிறபோது, பெருங்கோபமாக உருவெடுக்கிறது. பெற்றோரின் சண்டையால், அதில் தொடர்பற்ற குழந்தைகள் மனவேதனை அடைகிறார்கள். 'அப்பா, அம்மா பிரிஞ்சுபோய் நம்மளையும் கைவிட்ருவாங்களோ' என்ற பய உணர்வுக்கு ஆளாகிறார்கள். ''எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர், தங்களுக்குள் மிதமிஞ்சிய கோபத்தை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது'' என்கிறார் குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா. இதுபோன்ற சூழலில் குழந்தைகள் முன்பு தம்பதியர் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளையும் சொல்கிறார். 
* முழுமையாகப் பேசத் தெரியாத காலத்திலேயே குழந்தைகள், பெற்றோரின் முகங்களைப் பார்த்து உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்துதான் அவர்களும் கற்றுக்கொள்கின்றனர். பெரிதாக கத்துவது, பேசாமல் புறக்கணிப்பது போன்ற செயல்களை பெற்றோரிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, காமம், கோபம் இரண்டையும் குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படுத்திக்கொள்ளாதீர்கள். 
குழந்தைகள்
* தம்பதியருக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அதை அறிவுப்பூர்வமாகப் புரியவைக்க முயற்சியுங்கள். முரண்பாடுகளை எப்போதும் எதார்த்தமாக அணுகுங்கள். இணையிடம் எதையும் மறைக்க வேண்டாம். ஒரு விஷயம் ஏன் இணைக்கு அவசியமில்லை என்பதை தெளிவாகப் புரியும்படி சொல்லும் பொறுப்பு உள்ளது. இணையோடு ஆரோக்கியமாக விவாதித்து, உண்மை நிலையைப் புரியவைக்கலாம். வார்த்தைகளால் அடக்க முயற்சிப்பதும், கோபத்தைக் காட்டுவதும் தவறான அணுகுமுறை. 
* யாரும் தனக்கான தேவையைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது. தனது கருத்தை எதிராளிக்குப் புரியவைக்க உரையாடலும், விவாதமும் அவசியம். எது நடந்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இணையை அடக்குவது இயல்புக்கு எதிரானது. உங்களுக்குள் சிறிய விஷயங்களில் பிரச்னை ஏற்படும்போது, குழந்தையை நீதிபதியாகப் பாவித்து, அவர்களிடம் சொல்லி கருத்தைக் கேளுங்கள். பிரச்னைகளால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்றும் விளையாட்டாக குழந்தைகளோடு விவாதியுங்கள். இதனால், பிரச்னையின் டென்ஷன் குறையும். குழந்தைக்கும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்ததாக இருக்கும். 
* தனிமனித சுதந்திர எல்லைகளை மதிக்காமல் ஊடுருவும்போதுதான் இருவருக்கும் இடையில் முரண்பாடு, கசப்பு எல்லாம் உருவாகின்றன. அன்பு, காதல், பாசம் எதுவாக இருப்பினும் இணையின் சுதந்திரத்தை பறிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும்போது வெறுப்பு உண்டாகிறது. இருவருக்குமான பிரைவசியை மதித்து சுதந்திரத்தை அனுமதிக்கலாம். பெற்றோர் விவாதிக்கும்போது, சம்பந்தமின்றி குழந்தைகள் தலையிடத் தேவையில்லை என்பதைப் புரியவையுங்கள். பரஸ்பரம் எவர் மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 
* சிறிய பிரச்னைகளும் ஈகோவால் பெரிதாக உருவெடுக்கிறது. குழந்தைகள் முன்பு கத்துவது, கடுமையான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்கவும். ‘நீ தேவையில்லை’’ என்று இணையைப் புறக்கணிப்பதும், குழந்தைகளிடம் ‘‘நீ யார் பக்கம்’’ என்று கேட்பதும் மிகப்பெரிய தவறு. இதுபோன்ற தம்பதியரை குழந்தைகள் மதிப்பதில்லை. தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாதபோது, குழந்தைகள் வழி தவறுவது எளிதாகிறது. தம்பதியருக்குள் நடக்கும் இணக்கமற்ற சூழல், குழந்தைகளின் நம்பிக்கையையும் லட்சியத்தையும் சிதைக்கும். 
* பெற்றோர் சண்டையிடும் வீடுகளில், குழந்தைகள் அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. குழந்தைகள் அதிகம் செலவழிக்கவும், பொறுப்பின்றி நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் தவறு செய்யும்போது அதைக் கண்டறியவும் பெற்றோருக்கு நேரம் இருக்காது. அவர்கள் மனம் முழுக்க இருவருக்குள்ளான பிரச்னை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற சூழலில் பொய் சொல்வது, மனம்போன போக்கில் செல்வது போன்ற நடத்தை மாற்றங்களுக்கும் குழந்தைகள் ஆளாகின்றனர். 
எனவே, தம்பதியர்களுக்குள் நடக்கும் சண்டையால் பாதிக்கப்படுவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகளின் எதிர்காலமும்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 
* மனிதர்கள் நிறையும் குறையும் நிறைந்தவர்கள். அவரவருக்கென்று சில பிரத்தியேக குணங்கள் இருக்கும். தம்பதியர் பாசிட்டிவான விஷயங்களைக் கண்டுபிடித்து பாராட்டிக்கொள்வதன் வழியாக, நெகட்டிவ் விஷயங்கள் காணாமல்போகும். நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுவது என்று குடும்பத்தின் மகிழ்வைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலமே குழந்தைகள் வளர ஆரோக்கியமான சூழலை உருவாக்கித்தர முடியும்

Tuesday 22 March 2016

சிறுதானிய வற்றல், வடாகம் வகைகள்

வரகுக் கூழ் வற்றல்  

குதிரைவாலி முறுக்கு வற்றல் 
 
தினைத் தக்காளி வற்றல்  

சாமை கறிவேப்பிலை வற்றல் 
 
வரகு பச்சைமிளகாய் வற்றல்  

மக்காச்சோள கூழ் வற்றல் 
 
கம்பு-பாலக் கீரை வடாகம்  

வரகு முறுக்கு வற்றல்
வற்றல், வடாகம் போடும் முன் கவனிக்க வேண்டியவை

*  காலை இளம்வெயிலில் பிழியவும்.

*  காகம் கொத்தாமல் இருக்க, கறுப்புத்துணி அல்லது குடையை, குச்சியில் கட்டி வைக்கவும்.

*  வடாகத்துகுரிய  மாவை மெஷினில் அரைக்கும்போதே, ஜவ்வரிசி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

*  புளித்த மோர் அல்லது எலுமிச்சைச் சாறு விடலாம்.

*  மாவு புளித்த பிறகு வற்றல் இட்டால், சுவை கூடும்.

  துணியில் வற்றல் பிழிந்தால், காயவிட்டு, நீர் தெளித்து, துணியில் இருந்து எடுக்கவும்.

  2 அல்லது 3 நாட்கள் நன்கு காய விடவும். சரியாக காயவில்லை என்றால், பூஞ்சை பிடித்து விடும்.

*  வற்றல் போட ஏற்ற காலம் மார்ச், ஏப்ரல் மாதங்கள்.

  வற்றல் வகைகளை மைக்ரோவேவ் அவனிலும் பொரிக்கலாம்.

-கிருஷ்ணகுமாரி ஜெயகுமார்

வரகுக் கூழ் வற்றல்

தேவையானவை:

 வரகரிசி - 500 கிராம்
 ஜவ்வரிசி - 100 கிராம்
 சீரகம் - 2 டீஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 புளித்த மோர் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பச்சைமிளகாய் - 4
செய்முறை:
வரகரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் கலக்கி புளிக்க விடவும். மறுநாள் பெரிய குக்கரில் 4 லிட்டர் தண்ணீர் விட்டு அரைத்த மாவை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். புளித்த மோர், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும். இதனுடன் ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக கூழ் காய்ச்சி, ஸ்பூனால் எடுத்து, பாலிதீன் ஷீட்டில், வட்ட வட்டமாக ஊற்றவும். நன்கு காய வைத்து எடுத்து, தேவைப்படும் போது பொரிக்கவும். வரகுக் கூழ் வற்றல் தயார்.

திரைவாலி முறுக்கு வற்றல்

தேவையானவை:
 குதிரைவாலி மாவு - 500 கிராம்
 ஜவ்வரிசி - 100 கிராம்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
ஜவ்வரிசியை முதல்நாள் இரவு ஊற விடவும். காலையில் பச்சைமிளகாய் விழுது, பெருங்காயம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கலக்கவும் இதனுடன் குதிரைவாலி மாவு சேர்த்துக் கலக்கவும். 3 மடங்கு நீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கிளறவும். வெந்து, கெட்டியானதும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி ஆறவிட்டு, முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து நன்றாகக் காயவிட்டு எடுத்தால். குதிரைவாலி முறுக்கு வற்றல் ரெடி.

தினைத் தக்காளி வற்றல்

தேவையானவை:
 தினை மாவு - 2 கப்
 ஜவ்வரிசிமாவு - அரை கப்
 தக்காளிச்சாறு - ஒன்றரை கப்
 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தக்காளிச்சாறு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும். கொதிவரும் போது கலந்து வைத்துள்ள தினைமாவு, ஜவ்வரிசி மாவு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். பிறகு ஆறவிட்டு சிறிது, சிறிதாக கிள்ளி வைத்து நன்கு காய விடவும். நன்கு காய்ந்ததும் சேர்த்து வைக்கவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

சாமை கறிவேப்பிலை வற்றல்

தேவையானவை:
 சாமை மாவு - 2 கப்
 ஜவ்வரிசி மாவு - அரை கப்
 கறிவேப்பிலை, பச்சைமிளகாய் அரைத்த விழுது - அரை கப்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
செய்முறை:
சாமை மாவு, ஜவ்வரிசி மாவு, பெருங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். கறிவேப்பிலை, பச்சைமிளகாய் விழுதுடன் 2 மடங்கு நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வரும் போது கலந்த மாவைக் கொட்டிக் கிளறி, கெட்டியானதும் ஆறவிட்டு, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டுப் பிழிந்து காய விடவும் தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

வரகு பச்சைமிளகாய் வற்றல்

தேவையானவை:
 வரகு மாவு - 2 கப்
 ஜவ்வரிசி - அரை கப்
 பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வரகு மாவு, ஜவ்வரிசி (ஒரு மணி நேரம் ஊற வைத்தது) பச்சைமிளகாய் விழுது, சீரகம், பெருங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து நீரில் கலக்கவும். அடுப்பில் வைத்து கிளறி, வெந்ததும் இறக்கி ஸ்பூனால் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் அல்லது சுத்தமான வெள்ளைத் துணியில் ஊற்றிக் காய விடவும். தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

மக்காச்சோள கூழ் வற்றல்

தேவையானவை:
 மக்காச்சோள மாவு - ஒரு கப்
 அரிசி மாவு - அரை கப்
 உப்பு - தேவையான அளவு
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பிரண்டைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மக்காச்சோள மாவு, அரிசி மாவு, உப்பு, சீரகம், பிரண்டைச்சாறு, பெருங்காயம், பச்சைமிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் 5 கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் மாவைக் கொட்டி கிளறி, வெந்ததும் இறக்கி, ஆறவிட்டு, ஸ்பூனால் எடுத்து துணியில் ஊற்றிக் காயவிடவும். தேவையான போது எடுத்துப் பொரித்தெடுக்கவும்.

கம்பு-பாலக் கீரை வடாகம்

தேவையானவை:
 கம்பு மாவு - 2 கப்
 அரிசி மாவு - அரை கப்
 ஜவ்வரிசி - அரை கப்
 பாலக்கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது - ஒரு கப்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 புளித்த மோர் - ஒரு கப்
செய்முறை:
கம்பு மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பாலக் கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது புளித்த மோர் தேவையான நீர் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். நன்கு வெந்ததும் இறக்கி, இதனுடன் முதல் நாள் இரவே ஊற வைத்த ஜவ்வரிசியைக் கலக்கவும். வாழை இலை அல்லது மந்தார இலையை எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை கைகளில் வைத்து தட்டவும் (வாழை இலை என்றால், தேவைக்கேற்ற மாதிரி வெட்டி நன்கு படிய வைத்துக் கொள்ளவும். இலை வடாகம் போடுவதற்கேற்ற தட்டுகள் இருந்தால், இதையும் எடுத்துக் கொள்ளலாம்.) சிறிதளவு எண்ணெய் தடவி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, நன்கு காய விடவும். பிறகு பொரித்தெடுக்கவும்.

வரகு முறுக்கு வற்றல்

தேவையானவை:
 வரகரிசி மாவு - 2 கப்
  பொடித்த ஜவ்வரிசி - அரை கப்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கி, தேவையான நீர் சேர்த்துக் கலக்கி, கொதிக்க விடவும். நன்கு வெந்ததும், ஆற விட்டு ஓமப்பொடி பிழியும் அச்சில் மாவைச் சேர்த்துப் பிழிந்து காய விடவும். காய்ந்ததும் எடுத்து, தேவைப்படும் போது பொரித்தெடுக்கவும்.

சமையல் சந்தேகங்கள்: சீஸ் சேர்த்து சப்பாத்தி செய்யலாமா?

சீஸ் சேர்த்து சப்பாத்தி செய்யலாமா?

சீஸில் புரதச்சத்து நிரம்பி உள்ளதால், தாராளமாக உபயோகப்படுத்தலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய க்யூப் சீஸ்களை வாங்கி, மெல்லிய சீஸ் துருவியின் உதவியால் துருவி, மாவுடன் கலந்து சப்பாத்தி இடலாம். சமைக்கும் சீஸை (குக்கிங் சீஸ்) இதற்கு உபயோகப்படுத்த வேண்டாம். பதப்படுத்தப்பட்ட சீஸ் க்யூப்ஸ் உபயோகிக்கவும். ஓர் ஆழாக்கு மாவுக்கு 25 கிராம் (ஒரு க்யூப்) உபயோகப்படுத்தவும்.

ஊறுகாய் கெடாமல் இருக்க, என்ன சேர்க்க வேண்டும்?

ஊறுகாய் கெடாமலிருக்க, வினிகர் மற்றும் சோடியம்-பென்சோவேட் சேர்க்கலாம். தயாரித்து விற்பனை செய்வதாக இருந்தால், மட்டும் இவ்வித பிரிசர்வேட்டிவ் உபயோகப்படுத்தவும். முடிந்தவரை வீட்டில் தயார் செய்த கடுகுப்பொடி, வெந்தயப்பொடி தூவி, சரியான பக்குவத்தில் தயார் செய்து, உலர்ந்த பாட்டிலில் வைத்தால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்குக் கெடாது.
காலிஃபிளவர் வறுவலை முறுகலாகச் செய்வது எப்படி?

காலிஃபிளவரை பெரிய பூக்களாகப் பிரித்தெடுத்து புழுக்கள் இல்லாமல் நன்கு கழுவவும். பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்துவரும் போது காலிஃபிளவரைச் சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீரை வடிகட்டவும். 

ஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியான தோசை மாவு பக்குவத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் உலர்ந்த ரொட்டித்தூளை வைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரை மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து, பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடான தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தயிர் உறை ஊற்ற மண் கிண்ணத்தை உபயோகிக்கலாமா? இதை சுத்தம் செய்வது எப்படி?

தயிர் உறை ஊற்ற தாராளமாக மண் கிண்ணத்தை உபயோகிக்கலாம். வெயில் காலத்துக்கு மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும். இந்தப் பாத்திரத்தை ‘லிக்விட்’ சோப் கொண்டு கழுவி உபயோகப்படுத்தவும்.

கடைகளில் கிடைக்கும் சோயா உருண்டைகள் மற்றும் சோயா துகள்களை எப்படி உபயோகப்படுத்துவது? எதற்கெல்லாம் உபயோகப்படுத்தலாம்?

சோயாவை அரைத்துப் பதப்படுத்தி சுலபமாக ஜீரணிக்கும். அளவுக்கு மாற்றப்பட்டு, உலர வைத்துச் செய்யப்படுவதே சோயா உருண்டைகள். உங்கள் சமையலில் காய்கறிகள் உபயோகப்படுத்திச் செய்யும் எந்தப் பொரியலோடும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். பிரஷர் குக்கரில் சோயா உருண்டைகளைச் சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, வெயிட் வைத்த பிறகு ஒரே ஒரு விசில் வந்தவுடன் அணைத்து விடவும். ஆறிய பிறகு தண்ணீரை வடித்து உருண்டைகளைப் பிழிந்து விட்டு, மறுபடியும் ஒருமுறை குளிர்ந்த நீரில் போட்டுப் பிழிந்தெடுத்து உபயோகப்படுத்தினால், சோயாவின் வாடை வராது.

பொடியாகக் கிடைக்கும் சோயாவைப் பொரியலுக்கும் உருண்டைகளாகக் கிடைப்பதை பிரியாணி, மசாலா, குருமா, கட்லெட், குழம்பு சூப் வகைகள் போன்ற பலவற்றுக்கும் காய்கறிகளோடு சேர்த்து உபயோகப்படுத்தப் பழகவும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, இது சிறந்த புரதச்சத்து உள்ள உணவாக அமையும்.

பதப்படுத்திய அரிசி மாவு தயாரிப்பது எப்படி?

பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக வடிய விடவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும் ஒரு துணியின் மீது பரப்பி நிழலில் ஆற விடவும். இதை மெஷினில் கொடுத்து நைசாகத் திரித்து ஒரு பெரிய தட்டில் பரவ விட்டு ஆற வைக்கவும். பிறகு சலித்து பாட்டிலில் சேர்த்து வைக்கவும். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இதுதான் பதப்படுத்திய அரிசி மாவு செய்யும்முறை.
இனிப்பு கலந்த குழிப்பணியாரம் தயாரிப்பது எப்படி? எவ்வளவு மாவுக்கு எவ்வளவு வெல்லம் சேர்க்க வேண்டும்? 

ஓர் ஆழாக்கு பச்சரிசிக்கு அரை ஆழாக்கு அவல் என்ற விகிதத்தில் எடுத்து தனித்தனியே கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரைக்கும் போது இரண்டையும் ஒன்றாக அரைத்து, கடைசியில் ஓர் ஆழாக்கு துருவிய வெல்லம் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் கால் டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லைச் சூடாக்கிக் குழிகளில் நெய் விட்டு மாவை ஊற்றி சுட்டெடுக்கவும். மாவு அரைத்த உடனேயே பணியாரம் சுடலாம்.

பேக்கிங் பவுடர் மற்றும் ஆப்ப சோடா இரண்டும் ஒன்றா? 

ஆப்ப சோடா என்பது சமையல் சோடா எனப்படும் சோடியம்-ைப-கார்பனேட் (sodium-bi-corbonate) பேக்கிங் பவுடர் என்பது இதே சோடியம்-பை-கார்பனேட்டுடன் சிறிது ஸ்டார்ச் மற்றும் டார்டாரிக் ஆஸிட் கலந்து தயாரிக்கப்படுவது. கேக் மற்றும் பிஸ்கட்டுகளில் பேக்கிங் பவுடர் சேர்க்கும் போது சிறிது சிறிதாக கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிவருகிறது. இதனால் கேக் உப்பி பெரிதாக வரும்.

பலவகை சாதங்கள் செய்யும் போது கையால் பிசையலாமா? அப்படிக் கையால் பிசைந்தால் சாதம் கெட்டுப் போய்விடுமா?


சமைத்த உணவுகள் எதுவாக இருந்தாலும் கைகள் பட்டால், பெரும்பாலும் கெட்டுப்போய்விடும். எனவே எதையுமே கைகள் படாமல் பயன்படுத்துவதே நல்லது.
மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளில் உப்பு எப்போது சேர்க்க வேண்டும்?

காய்கறிகளைச் சமைக்கும்போது அவற்றில் சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன்) தண்ணீர் தெளித்து மூடி, வேகும் வரை சமைக்க வேண்டும். பொரியல் செய்யும் போது எண்ணெய், உப்பு அதற்கு வேண்டிய காரம் (தேங்காய், மிளகாய் விழுது) எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அவனில் வைக்கலாம்.

குழம்புக்குச் செய்யும்போது காய்கறி வெந்த பிறகு, வேகவைத்து மசித்த பருப்பு, புளிக்கரைசல், சாம்பார்பொடி எல்லாவற்றையும் சேர்க்கும் போது உப்பையும் சேர்க்கலாம். உப்பைக் குறைத்துச் சேர்க்க வேண்டும். அவனில் வேகவைக்கும்போது உப்பு, காரம் போன்றவை அதிகமாகி விடும். எனவே, கவனமாக சமைக்க வேண்டும்.
‘காஸ் அடுப்பில் சமைக்கும் போது சிம்மில் வைத்தால், காஸ் வீணாகி விடும்’ என்று என் வீட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் சரியா?

‘சிம்மில்’ வைத்தாலும் காஸ் வீணாகும் என்பது தவறு. எந்தெந்த சமையலுக்கு எப்படி உபயோகப்படுத்த வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

சிறிய பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், நான்-ஸ்டிக் பாத்திரங்கள் போன்றவற்றுக்கு முடிந்தவரை மிதமான தணலில் வைப்பது நலம். குக்கர் போன்றவற்றை உபயோகப்படுத்தும்போது முழு பிரஷர் வந்த பிறகு, குறைந்த தணலில் வைப்பது நலம். அதிக தணல்தான் காஸ் வீணாவதற்கு வழி வகுக்கும்.

மேலும் எந்தப் பாத்திரத்தை வைத்தாலும், பாத்திரத்தின் அடிபாகத்துக்கு உள்ளாகவே தணல் இருக்க வேண்டும். பக்கங்களில் மேலே வருவது போல வைக்கக் கூடாது. சமையல் பண்டங்களில், சரியான தண்ணீரும் அளவுக்கு தகுந்த பாத்திரமும் வைக்கும் போது கேஸ் மிச்சப்படும்.
ஒரு கிலோ சாதாரண சர்க்கரையைப் பொடி செய்தால் எவ்வளவு சர்க்கரைப் பொடி கிடைக்கும்? கேக் பிஸ்கட் செய்யும் போது சாதாரண சர்க்கரை அளவு எடுக்க வேண்டுமா? பொடித்த சர்க்கரை அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதைத் தெரிவிக்கவும்.

பொதுவாக சர்க்கரையை ஆழாக்கில் அளந்தால் ஒரு கிலோவுக்கு 5 ஆழாக்கு வரும். அதாவது ஒரு ஆழாக்கு என்பது 200 கிராம் என்ற அளவு சரியாக இருக்கும். அதுவே பொடி செய்த சர்க்கரையானால் ஒரு ஆழாக்கு தலைதட்டி அளந்தால், 150 கிராம் அளவு வரும். கேக், பிஸ்கட் போன்றவைகளில் பொதுவாக பொடித்த சர்க்கரைதான் உபயோகப்படுத்தப்படுகிறது. வெயிட் போட்டு அளப்பதென்றால் எல்லோர் வீடுகளிலும் வெயிட் மிஷின் இருக்காது என்பதால், இந்தக் கணக்கை எடுத்துக் கொள்ளலாம்.
வடநாட்டில் ‘ஜல்ஜீரா’ என்ற பானம் கோடையில் தயாரிக்கப்படுகிறது. அதை வீட்டில் செய்வது எப்படி? 

சிறிது புளியை ஊற வைத்து, நீர்த்த புளிக் கரைசலாகக் கரைத்து வடிகட்டி 3 டம்ளர் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ருசிக்கேற்ப உப்பு 2 டீஸ்பூன், சர்க்கரை 3 டீஸ்பூன், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், ஒரு சிட்டிகை சிவப்பு மிளகாய்த்தூள், துருவிய இஞ்சி, வறுத்துப்பொடி செய்த சீரகத்தூள் 2 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, எலுமிச்சைத் துண்டுடன் மேலே ஐஸ்கட்டிகளைக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால், சிறிது உலர்ந்த மாங்காய்த்தூளை (அம்சூர் பொடி) கலந்து கொள்ளலாம்.

மாங்காயை வைத்து செய்யப்படும் ஊறுகாய்களுக்குத்தான் கடுகு எண்ணெய் உபயோகிக்க வேண்டுமா?

எந்தவித ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் உபயோகப்படுத்தலாம். பச்சையாக ஊற்றாமல் சூடு செய்து ஆறவிட்டு, அதற்கு பிறகு ஊறுகாயில் உபயோகப்படுத்தலாம். வதக்கி செய்யும் (பச்சைமிளகாய் போன்றவை) ஊறுகாய் வகைகளுக்கும் உபயோகப்படுத்தலாம்.

அவல் வடாகமும், ஜவ்வரிசி வடாகமும் பொரிக்கும் போது சிவந்து விடுகிறது. பளிச்சென்று வெண்மையாக வருவதில்லை ஏன்?

பொதுவாக ஜவ்வரிசி வடாகத்தில் புளித்த மோர் சேர்ப்பதால் சிவக்கும். வடாகம் செய்ய ஜவ்வரிசியை, தயாரித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆறியதும், இத்துடன் எலுமிச்சை ஜூஸ் எடுத்துச் சேர்த்துக் கலக்கவும். பிறகு காய வைத்துப் பொரித்தெடுத்தால் வடாகம் அவ்வளவாக சிவக்காது. அவல் வடாகம் போன்றவை எப்படியும் சிவக்கத்தான் செய்யும். 

Saturday 25 April 2015

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க..!

Someone using a Samsung Galaaxy smartphoneநாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் Android Osஐ நமது மொபைல்களில் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம் என்ன தெரியுமா கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?
பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . . இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன
சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்
சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் இது Settings>app >running பகுதியில் Ram மெமரியின் உபயோக அளவுஇதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால் கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் ,இப்பொழுது போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்.
HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள் மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும்.

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம்

10360204பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.
தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
மூலிகை கசாயம்:
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்