Saturday 12 July 2014

குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!

பெற்றோர்களாக இருந்தால், குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் தங்கள் கண்களில் தென்படும் உணவுகள் அனைத்தையும் சுவைத்துப் பார்க்க விரும்புவார்கள்.
குறிப்பாக இனிப்பான தின்பண்டங்கள் என்றால், அவர்களுக்கு கொள்ளை பிரியம். ஆனால அப்படி குழந்தைகள் ஆசைப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்தால், அவர்களின் உடல்நலமானது விரைவில் பாழாகிவிடும்.
அதுமட்டுமின்றி, ஒருசில பெற்றோர்கள் ஆரோக்கியம் என்று நினைத்து வாங்கிக் கொடுக்கும் உணவுப் பொருட்கள் கூட தீங்கை விளைவிக்கும். அதிலும் அவை உடலுக்கு மட்டுமின்றி, மனதையும் பாதிக்கும்.
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உணவுகள்!!!எனவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருசில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் இறைச்சிகளானது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதனால் பல பெற்றோர்கள் அந்த இறைச்சிகள் சுத்தமாக உள்ளன என்று நினைத்து வாங்கி சென்று குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்கின்றனர்.
ஆனால் அப்படி பாக்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சிகளில் நைட்ரேட்ஸ் என்னும் இறைச்சி கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களுக்கு மூளையில் கட்டி, தொண்டை புற்றுநோய் போன்றவை விரைவில் வரக்கூடும்.
குளிர்பானங்கள் சோடா, கோலா போன்றவை கெடுதலை விளைவிப்பவை என்பது தெரியும். ஆனால் தற்போதைய குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒருமுறை அதனை குடிக்காமல் இருப்பதில்லை.
ஆனால் அப்படி அதனை அவர்களுக்கு கொடுத்தால், அவர்களது உடல்நிலை விரைவில் பாழாகும். சில நேரங்களில் கடைகளில் விற்கப்படும் டப்பாக்களில் அடைக்கப்படும் பழச்சாறுகள் கூட மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
நூடுல்ஸ் இன்றைய குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் கொள்ளை பிரியம். இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று இதனை அடிக்கடி செய்து கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி, தற்போது நிறைய உணவுப்பொருட்கள் தயாரான நிலையில் பாக்கெட் போட்டு விற்கப்படுகிறது.
உதாரணமாக, சூப், தக்காளி தொக்கு போன்றவை. இவை நீண்ட நாட்கள் வருவதற்கு முக்கிய காரணம், அதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் தான். இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களுக்கு ஆஸ்துமா, தலை வலி, சில நேரங்களில் அதிகப்படியான உப்பினால் இரத்த அழுத்தம் கூட வரக்கூடும்.
பாக்கெட் சிப்ஸ் பாக்கெட் சிப்ஸ்களில் எண்ணெய், சோடியம், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறங்கள் சேர்த்திருப்பதால், அதனை குழந்தைகள் அதிகம் உட்கொண்டு வந்தால், அவர்களின் பசியானது அதிகம் தூண்டப்பட்டு, அவர்கள் அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்ள நேரிடும். இதனால் உடல் பருமன் அடையக்கூடும்.
பலவண்ண செரில்கள் பலவண்ணங்கள் கொண்ட செரில்களை குழந்தைகளுக்கு காலை வேளையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், அவர்களுக்கு இயற்கையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கு பதிலாக, செயற்கை கெமிக்கல்கள் கிடைத்து, அவர்களின் உடல் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்திவிடும்.
சுகர்-ப்ரீ சர்க்கரை உடலுக்கு கெடுதலானது தான். அதே சமயம் சுகர்-ப்ரீ உணவுகள் நல்லதா என்றால், அதுவும் தவறு. ஏனெனில் சுகர்-ப்ரீ என்று விற்கப்படும் உணவுகளில் சில நேரங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால், அவர்களுக்கு மெட்டபாலிச பிரச்சனை, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே சுகர்-ப்ரீ உணவுகளை வாங்கும் முன், அதில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அப்படி சேர்க்கப்பட்டிருந்தால், அதனை வாங்காதீர்கள்.

Friday 11 July 2014

60 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் கல்விக் கடன் பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம்

12 ஆம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்காக வங்கிகளிடம் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏ.ரவி என்பவரது மகன் 12 ஆம் வகுப்பில் 59 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தார். தனது மகனுக்கு பி.இ. பயில்வதற்காக ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் கல்விக் கடனாக வழங்கும்படி திருப்பூர் பெரமணல்லூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரவி விண்ணப்பம் அளித்தார்.

எனினும் 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், மனுதாரரின் மகன் 59 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதால் கல்விக் கடன் வழங்க முடியாது எனவும் ஐ.ஓ.பி. நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரவி மனு தாக்கல் செய்தார். மனுதாரரின் மகனுக்கு கல்விக் கடன் வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து வங்கி நிர்வாகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயில வசதியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தக் கடன் இலவசமாக வழங்கப்படவில்லை. வட்டியுடன் சேர்த்து பிறகு மாணவர்கள் திருப்பி செலுத்தப்போகிறார்கள். பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசின் இந்தக் கொள்கையை மனதில் கொண்டு கல்விக் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது வங்கிகள் முடிவெடுக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் பெற உரிமை உண்டு என்று கடந்த 27.9.2012 அன்று நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 முதல் 30 நாள்களுக்குள் கல்விக் கடன் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலமாகவோ அல்லது 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலோ இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேரும்போது, அவர்களுக்கு கல்விக் கடன் வழங்கலாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தகுதி நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே கல்விக் கடன் வழங்க முடியும் என வங்கிகள் கூற முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மத்திய நிதிநிலை அறிக்கை 2014-15 - முக்கிய அம்சங்கள்

புதிதாகப் பொறுப்பு ஏற்றுள்ள மத்திய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2014 ஜூலை 10ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் இங்கே.
* தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு
* சேமிப்புக்கான 80 சி பிரிவில் வரிச் சலுகை, ரூ.1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்வு
* வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை, ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்வு
* சேமிப்பை அதிகரிக்கும் வகையில் மீண்டும் கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
----------
* காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களுக்கு வரி குறைப்பு.
* எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரிப்பு.
* காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 விழுக்காடாக குறைக்கப்படும்.
* சிகரெட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாக உயர்வு.
* பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களின் தான வரி 16 விழுக்கடாக உயர்வு.
---------------
* கம்ப்யூட்டர், சோப்பு, சிறிய எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி. விலை குறையும்.
* சோப்பு தயாரிப்பிற்கான உற்பத்தி வரி குறைப்படும்.
* பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான சுங்க வரி 5 விழுக்காட்டிலிருந்து. 2.5 விழுக்காடாக குறைப்பு.
* வைரம், நவரத்தினக் கற்கள் விலை குறையும்.
* தொலைதொடர்பு உபகரணங்களுக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பு.
---------------------
* காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களுக்கு வரி குறைப்பு.
* எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரிப்பு.
* காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 விழுக்காடாக குறைக்கப்படும்.
* சிகரெட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாக உயர்வு.
* பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களின் தான வரி 16 விழுக்கடாக உயர்வு.
---------------
* கம்ப்யூட்டர், சோப்பு, சிறிய எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி. விலை குறையும்.

* சோப்பு தயாரிப்பிற்கான உற்பத்தி வரி குறைப்படும்.

* பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான சுங்க வரி 5 விழுக்காட்டிலிருந்து. 2.5 விழுக்காடாக குறைப்பு.

* வைரம், நவரத்தினக் கற்கள் விலை குறையும்.

* தொலைதொடர்பு உபகரணங்களுக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பு.

---------------------

* 25 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் முதலீட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்படும்.

* கொழுப்பு அமிலம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சங்க வரி ரத்து.

* புதிய மின் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது.

* நேரடி வரிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

* கல்வி வரியில் மாற்றம் இல்லை.



25 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் முதலீட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்படும்.

* கொழுப்பு அமிலம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சங்க வரி ரத்து.

* புதிய மின் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது.

* நேரடி வரிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

* கல்வி வரியில் மாற்றம் இல்லை.

------------------

* குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவ ரூ.200 ஒதுக்கீடு.

* நவாமி கங்கா என்ற கங்கையை தூய்மைப்படுத்தும் புதிய திட்டத்திற்கு ரூ.2,307 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு, ராஜஸ்தானில் சூரிய மின் சக்தி திட்டம் தொடங்கு ரூ.500 நிதி ஒதுக்கீடு.

* தூத்துக்குடியில் வெளிப்புறத் துறைமுகம் அமைக்கப்படும்.

* சென்னை - பெங்களூரு தொழிற்பாதை திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

----------

* இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர ஸ்கில் இந்தியா என்ற பெயரில் புதிய திட்டம்.

* நதிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

* கங்கை நதியை சுத்தப்படுத்த அயல் நாடு வாழ் இந்தியர் நிதித் திட்டம் உருவாக்கப்படும்.

* அலகாபாத்தில் இருந்து ஹல்டியா வரை கங்கையை இணைக்க ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.

* அசாம், ஜார்க்கண்டில் புதிய விவசாய ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

------------



* சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 விழுக்காடு வரி உயர்வு.

* அச்சு ஊடகங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.

* டி.வி.களில் பயன்படுத்தப்படும் பிக்சர் டியூப்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு.

* வரி செலுத்துவோர் நலனிற்காக 60 புதிய சேவை மையங்கள் அமைக்கப்படும்.

* பெண் குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்கு புதிய சேமிப்புத் திட்டம்.

------------

* பெங்களூரு, ஃபரிதாபாத்தில் உயிரி தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்படும்.

* ஹைதராபாத், சிலிகுரி உள்ளிட்ட 6 இடங்களில் கடன் வசூல் மையங்கள் அமைக்கப்படும்.

* உத்தரகாண்டில் தேசிய இமாலய கல்வி மையம் அமைக்கப்படும்.

* காஷ்மீரில் உள், வெளி விளையாட்டு அரங்குகள் உலகத் தரத்தில் உருவாக்கப்படும்.

* தேசிய விளையாட்டு ஆணையம் விரைவில் உருவாக்கப்படும்.

------------

* விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.100 கோடி.

* காவல் துறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.3,000 கோடி.

* புதுச்சேரிக்கு பேரிடர் நிதி உதவியாக ரூ.188 கோடி ஒதுக்கீடு.

* ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

--------------------

* ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகம் செய்யப்படும்.

* உரிமை கோரப்படாத பி.எஃப். பணத்தை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்படும்.

* மூத்த குடிமக்களின் கோரப்படாத பி.எஃப்., தபால், வங்கி கணக்குகளை முறைப்படுத்தக் குழு அமைக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக ‌கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

* பொதுப் போ‌க்குவர‌த்‌தி‌ல் பய‌ணி‌க்கு‌ம் பெண்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

--------------------

* புதிதாக 5 ஐஐஎம், ஐஐடி, கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

* சென்னை மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம், காச நோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்.

* கல்விக் கடன் விதிமுறைகள் எளிமையாக்கப்படும்.

* அனைத்து அரசுப் பெண்கள் பள்ளியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படும்.

* குத்துச்சண்டை, வில் வித்தை, துப்பாக்கிச் சுடுதல் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி தர புதிய பயிற்சி மையங்கள்.

----------------

* லக்னோ, அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.100 கோடி.

* நாட்டில் புதிதாக 7 நவீன தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.

* தங்க நாற்கர பாதையில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

* நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்து தர ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* நகர கட்டுமான வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படும்.

----------------

* டெல்லியைப் போன்று சென்னையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை விரிவுபடுத்தப்படும்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் 100 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும்.

* 2019 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

* அடுத்த 6 மாதங்களில் 9 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். அடுத்த 6 மாதங்களில் 9 விமான நிலையங்களில் மின்னணு விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். புதிய விமான நிலையங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

* 2018 ஆம் ஆண்டிற்குள் வங்கிகளுக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும். வங்கிகளுக்கு தன்னாட்சி அளித்து கூடுதல் பொறுப்புடைமை ஆக்க பரிசீலனை.

--------------------

* வருங்கால வைப்பு நிதி கணினி மயமாக்கப்படும்.

* அரசின் அனைத்து அமைச்சகங்களும் மின்னணு முறையில் ஒருங்கிணைக்கப்படும்.

* மென்பொருள் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோர் ஊக்குவிக்கப்படுவர்.

* பிராட்பேண்ட் மூலம் கிராமப்புறங்கள் இணைக்கப்படும்.

* மின்னணு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

--------------------

* நடப்பாண்டில் புதிதாக 16 துறைமுகங்கள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* கூடுதலாக 15,000 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படும்.

* சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு புத்துயிர் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* உயர் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் திட்டப் பணிகளுக்கு ரூ.100 கோடி.

* வடகிழக்கு மாநிலங்களில் சாலை சீரமைப்பிற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு.

-----------------


* பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.

* கா‌ப்‌பீ‌ட‌்டு‌த் துறை‌யிலு‌ம் அ‌ந்‌நிய நேரடி முத‌லீடு 49 ‌விழு‌க்காடாக அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம்.

* ப‌ல்வேறு துறைக‌ளி‌ல் ‌அ‌ந்‌நிய நேரடி முத‌லீடு மூல‌ம் ‌நி‌தி ஆதார‌ம் ‌திர‌ட்டட‌ப்படு‌ம்.

* முதலீட்டளார்களுக்கு சாதகமான வரி கொள்கைகள் உருவாக்கப்படும்.

* தொழில் துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தத் தனிக் குழு அமைக்கப்படும்.

-------------------

* வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.14,389 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.33,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறு தொழில் முனைவோரின் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி.

---------------------

* 100 நகரங்களை மேம்படுத்த ரூ.7,060 கோடி ஒதுக்கீடு.

* பாசன வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி.

* அனைத்து வீடுகளிலும் 24 மணி நேரம் மின்சாரம் ஏற்படுத்துவதே இலக்கு.

* தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.50,047 கோடி ஒதுக்கீடு.

* மின் விநியோகத் திட்டங்களுக்கு ரூ.500 கோடி.

-------------------


* அனைத்துப் பணப் பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு.

* அயல் நாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த புதிய வரித் திட்டம்.

* அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒரு குடும்பத்திற்கு இரண்டு வங்கக் கணக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இராணுவ வீரர்களுக்கு பதவிக்கு ஏற்ற வகையில் ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம்.

-----------------

* பாதுகாப்புத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2.29 லட்சம் கோடி. பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு சிறப்பு சேமிப்புத் திட்டம்.

* சமுதாய வானொலி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுரங்கத் தொழிலை ஊக்கப்படுத்த சுரங்க, கனிம வள சட்டம் திருத்தப்படும்.

* மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.

-------------------

* விவசாயத்தில் 4 விழுக்காடு வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* விவசாய விளை பொருட்களைப் பாதுகாக்க ரூ.5,000 கோடியில கிடங்குகள் அமைக்கப்படும்.

* ஆந்திரா, ராஜஸ்தானில் புதிய வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

* நகர்ப்புறங்களில் விவசாயிகளே சந்தைகள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.

* நிலம் இல்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் உதவி திட்டம்.

* தெலங்கானா, அரியானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

* அனைத்து விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* கிடங்குகளின் திறனை அதிகரிக்க ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* நிலங்களுக்கு ஏற்ற பயிர்களை தேர்வு செய்யும் மண் பரிசோதனைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுற்றுச்சூழல் மாற்றங்களை ஆராய புதிய நிறுவனம்.

Thursday 3 July 2014

கச்சத்தீவு ஒப்பந்தம் இல்லை; கடல் எல்லை ஒப்பந்தம்தான் - அய்யநாதன் பேட்டி

கச்சத்தீவு ஒப்பந்தம் எதுவும் இல்லை. அது வெறும் கடல் எல்லை ஒப்பந்தம்தான். ஆனால் கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்ப்பதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருந்தது என்று நாம் தமிழர் கட்சியின் க.அய்யநாதன் கூறினார்.
மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் கிடையாது என்று பதில் அளித்திருந்தது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித்தொடர்பாளர் க.அய்யநாதன் வெப்துனியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-
சரியாக சொல்ல வேண்டுமானால், போடப்பட்ட ஒப்பந்தம் 'கச்சத்தீவு ஒப்பந்தம்' அல்ல. கடல் எல்லைகளைப் பிரிக்கும் ஒப்பந்தம்தான். ஆனால் இந்தியாவின் நோக்கம் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுப்பதுதான்.
இந்த ஒப்பந்தத்தின் பெயர் இந்திய-இலங்கை கடல் எல்லை வரைவு ஒப்பந்தம் (International Maritime Boundary line aggrement).
கடல் எல்லைகளை எப்படி பிரிப்பார்கள் என்று சொன்னால், Equidistant - The Median என்று சொல்லுவார்கள். இரு நாடுகளின் கரையிலிருந்து சமதூரத்தில் 4 அல்லது 5 இடங்களில் புள்ளிகள் வைத்து அந்த புள்ளிகளை இணைத்து இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லைக்கோட்டை வகுத்ததாகவும், அப்படி பிரிக்கும்போது கச்சத்தீவு இலங்கை பக்கம் போய்விட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு பிரிக்கும்போது ஒரு புள்ளி வேண்டுமென்றே இந்தியாவை நோக்கி இழுத்து வைத்துள்ளனர். அப்படி இழுத்து வைத்ததன் காரணமாக கச்சத்தீவு இலங்கையின் பக்கம் சென்றுவிடுகின்றது. இதை பேராசிரியர் சூரிய நாராயணன் வெளிக்கொண்டு வருகிறார்.
இந்திய ஆவணக் காப்பகத்தினுடைய இயக்குனராக இருந்த ஜபோட்டா என்பவர் கூறியதாக சில தகவல்களை ஒரு கட்டுரையில் பேராசிரியர் சூரிய நாராயணன் இவ்வாறு எழுதுகிறார்:
"அதாவது கச்சத்தீவு இலங்கைக்குப் போக வேண்டும் என்பதற்காக ஒரு புள்ளி இந்தியாவை நோக்கி இழுத்து வைக்கப்பட்டது. அவர்கள் நேர்மையாக புள்ளி வைத்திருந்தார்கள் என்று சொன்னால், இந்தியாவுக்கு கிழக்குப்பக்கம், கச்சத்தீவுக்கு 3 மைல் அப்பாலே இந்திய-இலங்கை கடல் எல்லை அமைந்திருக்கும். எனவே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புள்ளியை இழுத்து வைத்தார்கள் என்று இந்திய ஆவணக் காப்பகத்தினுடைய இயக்குனராக இருந்த ஜபோட்டா கூறியதாக பேராசிரியர் சூரிய நாராயணன் எழுதுகிறார்.
இந்த கட்டுரையை எழுதிய சூரிய நாராயணன் மீது எந்த வழக்கும் கிடையாது. இதை பல விவாதங்களில், பல காலமாக பேசிவரும் என் மீதும் இதுவரை எந்த வழக்கும் கிடையாது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கும்போது இது இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்று மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இது தமிழ்நாட்டுக்கு சொந்தமாது. சேது ஜமீனுக்கு சொந்தமாது என்று ஒப்புக் கொண்டிருப்பார்களேயானால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிதான் அதை கொடுக்க முடியும். ஆக அவர்கள் என்ன செய்தார்கள் என்று சொன்னால் இது இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ சொந்தமாது இல்லை. இது ஒரு தகராறுக்குட்பட்ட பகுதி. எனவே எல்லைகளைப் பிரிக்கும்போது கச்சத்தீவு அவர்களிடம் சென்றுவிட்டது. எனவே இது ஒரு Settled issue என்று இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கிறார்கள்.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது தமிழ்நாட்டினுடைய சொத்தான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்காக திட்டமிட்ட சதி தான் இந்த எல்லைக்கோடு ஒப்பந்தம். இப்போது இவர்கள் சொல்வது என்னவென்றால், ஐநாவினுடைய நிர்பந்தத்தின் பேரில்தான் நாங்கள் இந்த எல்லைக்கோடு ஒப்பந்தத்தை வகுத்தோம் என்கிறார்கள். ஆனால் கச்சத்தீவைக் கொடுக்கும்போது நாடாளுமன்றத்தில் அப்போதைய அமைச்சர் ஸ்வரன் சிங் அப்படி ஒரு வார்த்தையை சொல்லவே இல்லை. நாங்கள் எல்லைக்கோடுதான் போட்டுக் கொண்டோம் அதில் கச்சத்தீவு இலங்கைக்கு போய்விட்டது என்றுதான் சொன்னார்.
இதில் பாரம்பரியமாக கடலில் பயணம் செய்யும் உரிமை, பாரம்பரியமாக கடலில் மீ்ன் பிடிக்கும் உண்டா என்று கேட்டால் இல்லை என்று சொல்லுகிறார். அந்தப் பகுதியில் வணிக ரீதியிலா கப்பல்கள் எப்போதும் போல போகலாம். ஆனால் மீனவர்கள் மட்டும் போகக் கூடாது என்றார் ஸ்வரன் சிங்.
ஆக, இது தமிழ்நாட்டுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் அயோக்கியத்தனம் என்று காட்டமாகவே கூறினார் அய்யநாதன்

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்: மத்திய அரசு சொல்கிறது

கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மையப்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.

கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ‘இந்தியா - இலங்கை இடையிலான 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த சமூக சேவகர் சஞ்சய் காந்தி என்பவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள்ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச்சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத்திட்டு அளித்துள்ள அந்த பதிலில், ‘தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா - இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. அதேநேரம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல்நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த பதில் வெளியுறவுத்துறை மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ளனர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. கடல்நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளுமன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத்தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை’’ என்றார்.