Saturday 23 August 2014

தாய்மார்கள் கவனத்திற்கு...?

பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது;ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்...

நார்மல் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* குழந்தை பிறந்ததும் சில மணி நேரங்களில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு உடல் தெம்பு இருக்கும்;

* ஆனால் சிலருக்கு சில குறைபாடுகள் காரணமாக உடல் வ்லுவின்றி எழுந்திருக்க முடியாது, அதனால் பரவாயில்லை உங்களுக்கு முடியும் போது எழுந்து கொள்ளலாம்;

* நீங்கள் முக்கியமாக படுத்திருக்கும் போது உங்கள் கால்களை ஒடுக்கி வைத்தே உறங்க வேண்டும்;

*டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் நன்கு வேகமாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

* நன்கு நடைபயிற்சி செய்தல் அவசியம்; அப்போது தான் எடை பழையபடி வரும்; வயிறும் குறையும்;

*இப்போது நீங்கள் பெல்ட் (அ) காட்டன் துணி கொண்டு உங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ளுங்கள்; இது உங்கள் வயிற்றை பழைய அளவிற்கு இறுக்க உதவும்;

*இப்போது நீங்கள் வயிற்றைக் குறைப்பதற்காக உங்கள் மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

* உணவுக் கட்டுப்பாடு கூடவே கூடாது

*பத்திய உணவு என்று சமைத்துக் கொடுப்பார்கள்; தயவு செய்து சுவை பிடித்தாலும் பிடிக்காவிடினும் அதனை உண்ணுவதே சிறந்தது உங்கள் உடல் நிலைக்கும் உங்கள் குட்டிப் பாப்பாவுக்கும்;

சிசேரியன் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* நீங்கள் மூன்று நாட்களில் நடக்கத் துவங்கலாம்

*நீங்கள் டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் மெதுவாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

* ஒவ்வொரு முறை குளித்தப் பின்பும் தையல் போட்ட இடத்துல் நீர் இல்லாமல் பார்த்து ஒற்றி எடுக்க வேண்டும்; துடைக்கக் கூடாது அவ்விடத்தில்;

* உங்களுக்கு அதிகம் பத்திய உணவு தேவை இல்லை; ஆனால் காரம் மற்றும் புளிப்பு, ஒவ்வாமை குணம் உள்ள உணவு கூடவே கூடாது;

* நீங்கள் உங்கள் வயிற்றை மருத்தவர் ஆலோசனைப் படி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பெல்ட் அல்லது துணி மூலம் கட்டலாம்। ஆயினும் முழுமையாக வயிறு ஒட்டுமா என உறுதியளிக்க இயலாது

*நீங்கள் மல்லாந்துப் ப்டுத்தவாக்கில் எழுந்திருக்கக் கூடாது; குப்புற படுப்பதும் கூடாது;

* அதிக எடை தூக்குதல், வேகமாக நடத்தல், அதிக அளவு வேலை செய்தல் கூடவே கூடாது 8மாதங்களுக்கு;

*சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்;

பொதுவாக இரு வகையினரும் செய்ய வேண்டியது:

* குளிர் பானங்கள், செயற்கை உணவுப் பொருள், கடை உணவு, குளிர்ந்த நீர், அதிக காரம், அதிக புளிப்பு, சிக்கன் மற்றும் அதிக சூடு தரும் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்;

*ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்காமல் விரைவில் உலர்த்திடுங்கள்;

*உங்கள் உடல் சூடு குழந்தைக்குக் கண்டிப்பாக அவசியம் ஆதலால் குழந்தை உங்கள் அருகாமையிலேயே இருக்க வேண்டும்; உங்களுடன் உங்கள் அருகிலேயே தூங்க வேண்டும்;

* அதிகம் தண்னீர் மற்றும் பால், மீன், கீரை, பச்சைக்காய்கறிகள், திராட்சை,
பலா, மா தவிர்த்து அனைத்து விதமான பழங்கள் போன்றவற்றை அத்தியாவசிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்;

*பால் குறையும் சமயம் ரஸ்க், பிரட், பீன்ஸ், கோதுமை உணவு, ஓட்ஸ் கஞ்சி, பால், தண்ணீர், மீன், தயிர் சாதம் போன்றவை உடனடியாகப் பால் சுரக்க உதவும்;

* கஸ்தூரி மஞ்சள் வயிற்றில் உள்ள கோடுகளை நீக்க உதவும்; ஆனால் சிசேரியன் செய்தவர்கள் வெளிப்புற புண் ஆறியது இதனை உபயோகிக்கலாம்;

*குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை கர்ப்பம் தரித்தல் கூடவே கூடாது; சிலர் பால் கொடுக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்று தவறாக நினைக்கிறார்கள்; அப்படியெல்லாம் இல்லை, எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம்

*குழந்தை வெகு நேரம் பால் குடிக்காமல் இருந்தால் சேர்ந்திருக்கும் பாலை எடுத்துவிடுவது நல்லது;

* அதிக இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்;

* முக்கியமானது என்னவென்றால் இப்போது உங்கள் குழந்தை மட்டுமல்ல நீங்களும் புதிதாகப் பிறந்திருக்கிறீர்கள்; ஆதலால் உங்கள் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவு மூலம் வலு சேர்க்க வேண்டும்;

*அதிக அளவு காய்கறி சூப், மட்டன் சூப், ஈரல், முட்டை, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்;

இப்படியெல்லாம் நம்மை நாமே பார்த்துக்கொண்டால் வயதானாலும் தெம்புடன் இருக்கலாம்; பிரசவத்திற்கு பின் உடல் நிலையை கவனிக்கவில்லை எனில் பிற்காலத்தில் பாதிப்பு.


பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Some Cooking Tips

Saturday 9 August 2014


மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!



1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்


கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது.
பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

பெண்கள் கருத்தரிக்க முயலும் முன், தங்கள் உடலை ஆரோக்கியமாக, போதிய ஊட்டச்சத்து நிறைந்ததாக
பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சீரான முறையில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதோ இந்த உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் விரைவில் கர்ப்பமாகலாம்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சியானது ஹார்மோன்களை சீராக்குவதால், பெண்கள் கருத்தரிக்க முயலும் போது உணவில் சேர்த்து வந்தால், விரைவில் கருத்தரிக்கலாம்.
இரும்புச்சத்துள்ள உணவுகள்
பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகம் ஏற்படும்.
இப்படி இரும்புச்சத்து குறைபாட்டுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
எனவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளான கத்திரிக்காய், பருப்பு வகைகள் மற்றும் சோயா போன்றவற்றை அதிகம் பெண்கள் உட்கொண்டு வர வேண்டும்.
முட்டை
வைட்டமின் டி குறைபாடு இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் ஆய்வு ஒன்றில் கருத்தரிக்க முடியாத 80 பெண்களை பரிசோதித்த போது, அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டினால் தான் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
எனவே முட்டையை பெண்கள் சாப்பிடும் போது, அவர்களுக்கு வேண்டிய வைட்டமின் டி சத்தானது கிடைக்கும்.
சால்மன்
சால்மன் மீனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. இதனை பெண்கள் உட்கொண்டால், கருத்தரிக்கும் போது விந்தணுவானது பாதுகாப்பாக கருமுட்டையை அடைய உதவிபுரியும்.
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் கருத்தரிக்க அவசியமாக ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. இந்த சத்து குறைபாடு ஏற்பட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவு குறைந்து கருத்தரிக்க முடியாமல் செய்துவிடும்.
எனவே ஜிங்க் நிறைந்த உணவான பச்சை பட்டாணியை உட்கொள்வது மிகவும் நல்லது.

குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்க சொல்லிக் கொடுக்க வேண்டியவைகள்!

தற்போது நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதை விட, கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தான் அதிகம் வளர்ந்து வருகிறது. அந்த கொடுமைகளுக்கு பெண்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட பலியாகின்றனர்.
இதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பல போராட்டங்கள் மேற்கொண்டு வந்தாலும், தற்போதைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பாலியல் வன்முறைகளைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
உங்க குழந்தைங்க சொல் பேச்சை கேட்கமாட்டீங்குறாங்களா? இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க...
ஏனெனில் குழந்தைகள் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்று பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பினால், அங்குள்ளோராலும் குழந்தைகள் பாலியன் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
எனவே குழந்தைகள் சிறுவயதிலேயே பாலியல் கொடுமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகிவிட்டது. இங்கு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகளைப் பற்றி சொல்லிக் கொடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
படங்கள் மற்றும் வீடியோக்கள் பொதுவாக குழந்தைகளுக்கு படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் எதை சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்வார்கள்.
அதிலும் தற்போது இணையதளங்களில் குழந்தைகள் புரியும் வகையில், பாலியல் கொடுமைகள் பற்றி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை குழந்தைகளுக்கு காட்டி சொன்னால், குழந்தைகள் புரிந்து உஷாராகிக் கொள்வார்கள்.
கதை சொல்லுங்கள் குழந்தைகளுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் அதனை அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்பார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம், செய்கையுடன் பாலியல் கொடுமைகளைப் பற்றி சொல்லுங்கள்.
உதாரணத்தை காட்டுங்கள் மற்றொரு முறை, குழந்தைகளுக்கு உதாரணத்தை காட்டுவது. இப்படி உதாரணத்துடன் சொல்லிக் கொடுத்தாலும், குழந்தைக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதில் இருந்து விடுவிக்கலாம்.
தொடும் முறை குழந்தைகளுக்கு ஒருவர் எந்த எண்ணத்தில் தொடுகிறார் என்பதை பெற்றோர்கள் அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டும். நல்ல எண்ணத்தில் தொடுவது: ஒருவர் பேசும் போது கைகள் மற்றும் கன்னத்தை மட்டும் செல்லமாக கொஞ்சி தொட்டால், அதில் காமம் இல்லை என்று சொல்லுங்கள்.
கெட்ட எண்ணத்தில் தொடுவது: அம்மாவைத் தவிர வேறு யாரேனும் அந்தரங்க உறுப்பை தொட்டாலோ, உடனே தங்களிடம் வந்து சொல்ல வேண்டும் என்றும், இனிமேல் அவர்களுடன் பேசவோ, பழகவோ கூடாது என்றும் சொல்லிக் கொடுங்கள்.
ரகசியமாக தொடுவது ரகசியமாக தொடுவது என்பது, குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தும் வகையில் செய்வதாகும்.
அதாவது குழந்தையிடம் தவறாக நடந்துவிட்டு அல்லது கற்பழித்துவிட்டு, யாரிடமும் இதை சொல்ல வேண்டாம் என்று யாரேனும் சொன்னால், அதை மறைக்காமல் உடனே வந்து தங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
வெளிப்படையாக பேச சொல்லுங்கள் முக்கியமாக குழந்தைகளை வெளிப்படையாக, எப்போதும் அஞ்சாமல் பேச சொல்லுங்கள்.
மேலும் பள்ளி முடிந்து வந்ததும், அவர்களிடம் அன்றாடம் பள்ளியிலோ அல்லது அந்நாளிலோ நடந்ததை மறைக்காமல் சொல்லும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதன்மூலம் அவர்களின் நிலையை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும்.
'முடியாது' என்பது அவசியம் குழந்தைகளிடம் யாரேனும் வந்து சாப்பிட வாங்கித் தந்தாலோ அல்லது எங்கேனும் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னாலோ, சற்றும் அஞ்சாமல் முடியாது என்று சொல்லச் சொல்லுங்கள். மேலும் அது தான் நல்லது என்றும் சொல்லிக் கொடுங்கள்
அந்தரங்க உறுப்பு பற்றி சொல்லுங்கள் குழந்தையாக இருக்கும் போதே, அவர்களுக்கு அந்தரங்க உறுப்பு பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் அந்த இடத்தை யாரும் தொட அனுமதிக்கக்கூடாது என்றும் சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் அவர்கள் உஷாராவார்கள்.
ஆடையில்லாமல் இருக்கக்கூடாது தற்போது குழந்தைகளை யாரும் குழந்தையாக பார்க்காததால், அவர்களை ஆடையின்றி எப்போதும் இருக்கக்கூடாது என்று சொல்லுங்கள். குறிப்பாக வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது ஆடையில்லாமல் இருக்கவே கூடாது என்று கற்றுக் கொடுங்கள்.
அஞ்சாமல் உதவியை நாடுங்கள் ஒருவேளை யாரேனும் உன்னிடம் தவறாக, உனக்கு வலிக்கும் வகையில் மிரட்டி நடந்து கொண்டால், அப்போது சிறிதும் அஞ்சாமல் சப்தத்தை எழுப்புங்கள்.
அது யாராக இருந்தாலும், அவருக்கு அஞ்சாமல் கத்துங்கள். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்..