Wednesday 30 April 2014

ஆசிரியர் தேர்வு: ஐகோர்ட் புது உத்தரவு- வெயிட்டேஜ் மதிப்பெண் முறை செல்லாது என அறிவிப்பு

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை தொடர்பாக கடந்த 5.10.2012 மற்றும் 14.2.2014 ஆகிய தேதிகளில் அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 15 மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக 25 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களுக்காக 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 10, பட்டப் படிப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 மற்றும் பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வகை செய்யப்பட்டது.
இதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களில் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். 80 முதல் 89 சதவீதம் பெற்றவர்களுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 70 முதல் 79 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 48 மதிப்பெண்களும் 60 முதல் 69 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 42 மற்றும் 55 முதல் 59 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 36 வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கிடைக்கும்.
இதேபோல் 12-ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். யார் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற அடிப்படை யில் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும். இதேபோன்று பட்டதாரி ஆசிரியர் நியமனத் துக்கும் வெயிட்டேஜ் மதிப் பெண்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலிருந்து இன்னொரு குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே விதமான வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை சரியானது அல்ல என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இது தொடர்பான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக்களில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.நாகமுத்து, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது என்றும், இந்த முறை செல்லாது என்றும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:
பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பிலும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும்முறை தற்போது இல்லை. தகுந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் இந்த வெயிட்டேஜ் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயற்சி படிப்பு மற்றும் தகுதித் தேர்வில் ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண் களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அந்த முறை யானது அறிவியல் ரீதியாக சரியானதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத சலுகையை 2012-ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வேறு சில மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
ஜெ. 'பிரதமர்'!
கழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் இருந்து கால்குலேட்டரும் விழுந்தது.

''நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதிதான் வரப்போகிறது. காங்கிரஸ் கட்சியே ஆட்சியைத் தக்கவைக்குமா, பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்குமா அல்லது  இரண்டு பேருமே ஆட்சி அமைக்கும் பலத்தை அடையாமல் போக... மூன்றாவது அணி முன்னுக்கு வருமா என்பது எல்லாம் ரிசல்ட் நாள் அன்று இரவுதான் லேசாகத் தெரிய வரும். அதற்குப் பிறகுதான் சாணக்கியபுரியான டெல்லியில் அரசியல் சதுரங்க ஆட்டம் சரசரவெனத் தொடங்கும். ஆனால், கடந்த ஒரு வாரமாகவே காங்கிரஸ் மேலிடத்தில் இதற்கான முஸ்தீபுகள் தொடங்க ஆரம்பித்து இருப்பதுதான் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமான விஷயங்கள்!''
''என்ன செய்யத் தொடங்கியிருக்கிறதாம் காங்கிரஸ்?''
''மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் காங்கிரஸ் மேலிடம். இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களும் 110 இடங்களை காங்கிரஸ் தாண்டும் என நம்பிக்கையைக்கூடத் தரவில்லையாம். 100 இடங்களை தாண்டினாலே பெரிய விஷயம் என்று​தான் சொல்கிறதாம். ஜோசியர்கள் சிலர் 65 முதல் 73 தொகுதிகள்தான் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்று சொல்லி பதற்றத்தை அதிகப்படுத்துகிறார்கள். எனவே, காங்கிரஸின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. முதலில் ராகுல் மட்டுமே பிரசாரம் செய்தால் போதும் என்று நினைத்தார்கள். சோனியா, அவரது தொகுதியை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் என்றார்கள். சோனியா உடல்நிலையும் அவ்வளவாக சரியில்லை. ஆனாலும் தேர்தல் சூழ்நிலை சரியில்லை என்றதும் சோனியாவும் பல மாநிலங்களுக்கும் போக வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து பலவீனமான சர்வேக்களே வெளியான நிலையில், பிரியங்காவும் வீட்டை விட்டு வெளியேறி வர வேண்டிய நிலை உருவானது. இவர்கள் மூவரும்தான் இந்தியாவை வலம்வர வேண்டி உள்ளது. இதுகூட காங்கிரஸின் மரியாதையைக் காப்பாற்றுமே தவிர, ஆட்சிக்குக் கொண்டுவரும் பலத்தைக் கொடுக்காது என்ற நிலையில்தான், சோனியா தனது மேல்மட்டப் பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்தினார்!''
''என்ன பேசினார்களாம் அதில்?''
''காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இந்தப் பின்னடைவு என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் அனைவரும் அறிந்த சமாசாரங்கள்தான். அதனை விட்டுவிட்டு அடுத்த கட்ட ஆலோசனை​களை மட்டும் சொல்கிறேன். 'ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக நாம் அறிவித்திருக்க வேண்டும்’ என்றார்களாம் சிலர். 'இது காலம் கடந்த யோசனை’ என்றாராம் சோனியா. 'மூன்று மாதத்துக்கு முன் ராகுல் பெயரை அறிவித்திருந்தால், அதுவே நெகடிவ் ஆனது என்றும் சிலர் சொல்லியிருப்பார்கள்’ என்றாராம் சோனியா. அடுத்து சொல்லப்பட்டதுதான் முக்கியமானது. 'காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பி.ஜே.பி-யை வரவிடக் கூடாது. பி.ஜே.பி. வந்து உட்கார்ந்தால் 10 ஆண்டு காலத்துக்கு அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார்கள். இரண்டு தடவை தொடர்ச்சியாக பிரதமராக நரேந்திர மோடி இருந்துவிடுவார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் காங்கிரஸ் இல்லாமல் போனால், இந்தியா முழுமைக்கும் காங்கிரஸின் கட்டமைப்பைக் காப்பாற்றுவது கஷ்டம். பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் இல்லை. அதனால் மாநில காங்கிரஸை ஒருங்கிணைப்பதும் முடியாது. எனவே, ஏதாவது குழப்பான சூழ்நிலையை உருவாக்கி இரண்டு வருட காலம் பி.ஜே.பி. இல்லாத காங்கிரஸ் பின்னிருந்து இயக்கும் கூட்டணி ஆட்சி வந்தால்கூட பரவாயில்லை’ என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது!''
''அப்படியா?''
''உடனேயே கால்குலேட்டர் புலிகள் தங்களது கூட்டல் கழித்தலைப் போட ஆரம்பித்தார்கள். காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு வெளியில் இருக்கும் கட்சிகளில் இருந்து மொத்தம் எத்தனை எம்.பி-க்கள் வருவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முலாயம்சிங் யாதவ், மாயாவதி, நிதிஷ்குமார், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய ஒன்பது பேர் பெயர் எழுதப்பட்டு ஒவ்வொருவருக்கும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றும் தோராயக் கணக்கு போட்டுள்ளார்கள். இவர்களுக்கு அவர்களின் பழைய செல்வாக்கு ஓரளவு தக்க வைக்கப்பட்டாலே மொத்தம் 120 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று சொல்லப்பட்டதாம். 'இதில் யாராவது ஒருவரை பிரதமராக முன்மொழிந்து அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் கூட்டணி பின்னால் இருந்து ஆதரித்தால் என்ன? நமக்கு பி.ஜே.பி. வரக் கூடாது, மற்றபடி யார் வந்தால் என்ன?’ என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் முலாயம்சிங், ஜெயலலிதா ஆகிய இருவரும் பிரதமர் ஆசையை அரசல்புரசலாக வெளிப்படுத்தியவர்கள். ஜெயலலிதா பிரதமர் ஆக, மம்தா தனது விருப்பத்தைச் சொல்லிவிட்டார். முலாயம் சிங்கை தடுக்க வேண்டுமானால் ஜெயலலிதாவை ஆதரிக்க மாயாவதி தயங்க மாட்டார். நவீன் பட்நாயக், எப்போதும் ஜெயலலிதாவின் விசிறி. 'தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக என்னுடைய ஆதரவு உண்டு’ என்று ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் முன்வரலாம். இப்படி பல்வேறு சூழ்நிலை ஜெயலலிதாவை நோக்கி கனிந்து வந்ததை காங்கிரஸ் யோசித்தது. இதைத் தொடர்ந்து தனது தூதர் ஒருவரை பெங்களூரில் இருந்து கார்டனுக்கு அனுப்பியதாம் காங்கிரஸ்!''
''யாராம் அவர்?''
''பெங்களூரைச் சேர்ந்த, முன்னாள் முதல்வ​ராகவும் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவருக்கு நெருக்கமான பெண்மணி அவர். ஜெயலலிதாவுக்கும் அவர் ஆரம்பகாலத் தோழி. காங்கிரஸின் விருப்பங்கள் ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட்டன. எதிர்க்காற்று தான் போகும் திசைக்கு சாதகமாக அடிக்க ஆரம்பிக்கும் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. காங்கிரஸ் கசப்பை விலக்கி வைத்துவிட்டு, பி.ஜே.பி. வெறுப்பை அன்று முதல் அகலமாக்கிக்கொண்டார் ஜெயலலிதா. அவரின் இறுதிக்கட்ட சென்னைப் பிரசாரப் பேச்சுக்களைக் கவனித்தால் இது புரியும்!''
''ம்! சொல்லும்!''
''தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து, 'காங்கிரஸை வீட்டுக்கு அனுப்புவதே என் வேலை’ என்று பிரசாரம் செய்துவந்த ஜெயலலிதா, காங்கிரஸை விலக்கிவிட்டு, 'இது மோடியா... இந்த லேடியா என்று முடிவெடுக்கிற தேர்தல்’ என்று சொல்ல ஆரம்பித்தது இதனால்தான் என்கிறார்கள். ஜெயலலிதா இப்படி சென்னையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ராமநாதபுரத்தில் இருந்தார் ராகுல். 'குஜராத்தைவிட தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்’ என்று அவர் சொன்னார். 'குஜராத்தை மோடியும் தமிழ்நாட்டை ஜெயலலிதாவும் மோசமாக ஆள்கிறார்கள்’ என்றுதானே ராகுல் பேசியிருக்க வேண்டும்? அவர் ஏன் மோடியைவிட ஜெயலலிதா ஆட்சி சூப்பர் என்று மறைமுக ஆதரவைத் தரவேண்டும்? இங்குதான் இருக்கிறது சூட்சுமம். 'பி.ஜே.பி. வரக் கூடாது’ என்பதற்கான ஒன்றுபட்ட சிந்தனை ராகுலுக்கும் வந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கும் வந்துவிட்டது. அதனால்தான் மோடியை அதிகமாக விமர்சிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா ஆட்சியை மறைமுகமாக ராகுல் பாராட்டினார் என்றும் சொல்கிறார்கள்!''
''அப்படிப் போகிறதா விஷயம்?''
''பெங்களூரு தூதுவைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து இன்னொருவரும் வந்துள்ளார். மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கே இருப்பவரை 'மாளிகை’யில் சந்தித்துள்ளார். அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு முன்பு முயற்சித்தவர் என்பதால், பேச்சு சுமூகமாகப் போனதாம். ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பாசம் ஏற்பட அந்த 'ஐயா’ பயன்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சில வாரங்களாக அமுங்கியிருந்த பிரதமர் ஆசை மீண்டும் ஜெயலலிதாவுக்குத் துளிர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவரது நினைப்பு ஒன்றுதான், காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத மூன்றாவது அணி சார்பில் போட்டியிடும் கட்சிகளில் அ.தி.மு.க. அதிகமான எம்.பி-களை வைத்திருக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் துடிப்பாக இருக்கிறதாம். இன்றைய சூழ்நிலையில் மம்தா 30 எம்.பி-க்களை தாண்டக் கூடும். ஆனாலும், அவர் டெல்லி வர மாட்டார். உ.பி-யில் இருந்து வரும் தகவல்கள் முலாயம்சிங் யாதவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது என்றே சொல்கிறதாம். ஒருவேளை மாயாவதிக்குக் கிடைக்கலாம். எனவே இந்தக் கட்சிகளின் வரிசையில் 30 இடங்களுக்கு மேல் பிடிக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஜெயலலிதா நினைக்கிறார். யார் அதிக எம்.பி-களை வைத்துள்ளார்களோ அவர்களையே மூன்றாவது அணி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு அந்த இடத்தை ஜெயலலிதா பிடிப்பார் என்கிறார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஜெயலலிதாவை முன்மொழிய இப்போதே தயாராகிவிட்டார். காங்கிரஸ் கட்சியும் மனதளவில் தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறியே டெல்லி, பெங்களூரு தூதுவர்கள்!''
''பெரிய மாற்றமாக இருக்கிறதே?''
''மனதளவில் காங்கிரஸ் தயாராகிவிட்டது என்பதற்கு உதாரணம்தான் அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு. தனது சொந்த மாநிலமான உ.பி. சென்ற குர்ஷித், 'தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும். அதுமட்டுமல்லாமல், ஆட்சியமைக்க மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவைப் பெறுவது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும்’ என்று குர்ஷித் சொல்லியிருக்கிறார். மூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்கள் இப்போதே டெல்லிக்கு கிளம்பத் தயாராகிவிட்டார்கள்!''
''அதில் ஜெயலலிதாவும் ஒருவரா?''
''ம்! குர்ஷித் சொன்ன அதே நாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி கொல்கத்தாவில் இருந்தார். அவரும், 'தேர்தலுக்குப் பிறகு யாருக்கு எத்தனை இடங்கள் என்ற எண்ணிக்கைதான் ஆட்சியைத் தீர்மானிக்கிறது. எனவே, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும்’ என்று அபிஷேக் மனு சிங்வி சொல்லியிருக்கிறார். இதே நாளில் மும்பையில் நிருபர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவாண், 'மூன்றாவது அணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். குர்ஷித், சிங்வி, சவாண் ஆகிய மூவரும் சோனியா, ராகுல் குரலை மட்டுமே வழிமொழியக் கூடியவர்கள். எனவேதான் அவர்களது பேச்சு உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.''
''இது சாத்தியமா?''
''பி.ஜே.பி-யும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 272 தொகுதிகளை எட்டிவிட்டால் இந்த வாதப்பிரதிவாதங்களுக்கே அவசியம் இல்லை. அது வராமல் போனால்தான் சிக்கலே! பி.ஜே.பி-யை முலாயம் சிங், மாயாவதி, ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. மோடியை நிதிஷ்குமார் ஆதரிக்கமாட்டார் என்று காங்கிரஸ் நினைக்கிறது. மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் ஒருவேளை பி.ஜே.பி-யை ஆதரிக்கலாம். காங்கிரஸின் இந்த மூவ் தெரிந்ததால்தான் மோடி, 'ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகியோர் தயவு தேவைப்படாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை பி.ஜே.பி. பெறும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இப்படி ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பச்சைக்கொடி காட்ட ஆரம்பித்திருப்பதை அறிந்த மாயாவதியும், 'நான் பிரதமர் வேட்பாளர்தான்’ என்று திடீரெனச் சொல்ல ஆரம்பித்துள்ளார். முலாயம்சிங் தனது பிரதமர் கனவை வெளிப்படுத்தி இரண்டு மாதங்கள் ஆகிறது. முலாயம் எதைச் சொன்னாலும் உடனடியாக ரியாக்ஷன் காட்டக் கூடிய மாயாவதி இதுநாள் வரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தனது பிரதமர் கனவை வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதன் பின்னணியும் இதுதான் என்கிறார்கள்!''
''முதல்வர் கொடநாடு சென்று விட்டாரே?''
''ஏப்ரல் 27-ம் தேதி கொடநாடு கிளம்பிவிட்டார். 'அங்கிருந்தபடியே அரசு பணிகளை சில நாட்கள் கவனிப்பார்’ என்று தமிழக அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால், அமைச்சர்கள் கோட்டைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களைப் பார்க்க பொதுமக்கள் வராததால் கோட்டை வெறிச்சோடியே காணப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் அமைச்சர்கள், சொந்த மாவட்டத்தில் இருக்க உத்தரவு போடப்பட்டு உள்ளது. கொடநாட்டில் இருக்கும் முதல்வர், மே 9-ம் தேதி, சென்னை திரும்புவார் என்கிறார்கள். அன்றைய தினம் 12-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் முதல்வரைச் சந்திக்கவும் திட்டம் இருக்கிறது.''
''தேர்தல் ரிசல்ட் வரை அங்கு இருப்பார் என்கிறார்களே?''
''மே 9-ம் தேதி வராவிட்டால், 12-ம் தேதிக்கு மேல் வருவார் என்கிறார்கள்!'' என்று சொல்லிவிட்டு சிறகை விரிக்கத் தயாரானவர், ''அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்ததும் 26-ம் தேதி திடீர் மூச்சுத்திணறலால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மறுநாள் முதல்வர் கொடநாடு புறப்பட்டபோது ஆஸ்பத்திரியில் இருந்த ஓ.பி.எஸ். விமானநிலையத்திற்கு போய் வழியனுப்பிவிட்டு, மீண்டும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்'' என்றபடி  பறந்தார்.
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்


கொண்டுபோனவர்கள் யார்?
சென்னையில் இருந்து எல்லாத் தொகுதிக்கும் எப்படி பணம் கொண்டுசெல்லப்பட்டது என்பதை மத்திய உளவுத் துறை கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். அரசியல்வாதிகளைப் பயன்படுத்தாமல் வர்த்தகப் பிரமுகர்களை இதில் பயன்படுத்தினார்களாம். அவர்கள்தான் வருடம் முழுவதும் பணத்தைப் பக்குவமாகக் கொண்டுசெல்பவர்கள் என்பதால், அவர்களைத் தேர்வு செய்தார்களாம். ஒரு துணிக் கடை அதிபர், இரண்டு ஹோட்டல் முதலாளிகள், ஒரு ஸ்டீல் கம்பெனி, ரெட்டி அடை மொழி கொண்ட இருவர், ராவ் அடைமொழி கொண்ட ஒருவர் என்று பெயர் திரட்டி உள்ளதாம் மத்திய உளவுத் துறை!

ஆளுக்கு 10 தொகுதி!
தேர்தல் செலவுகளை ஒழுங்காகப் பார்க்காத வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் யார் எவர் என்பதைக் கண்டுபிடித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுக்கு 10 தொகுதியை கண்காணிக்கச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். சென்னை தலைமைக் கழகத்தில் புகார்கள் குவிகிறதாம்.

''இதெல்லாம் காரணமாய்யா?''
தி.மு.க. வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக கருணாநிதியைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு இவர்கள் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 'உங்க தொகுதியில என்ன நிலவரம்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பீங்க?’ என்று இவர்களிடம் கேட்கிறாராம் கருணாநிதி. தி.மு.க-தான் உறுதியாக ஜெயிக்கும் என்று சிலர் சொன்னார்களாம். இன்னும் சிலரோ, 'கடைசி நேரத்தில் ஆளுங்கட்சி பணம் கொடுத்துவிட்டது’ என்றார்களாம். 'இதெல்லாம் ஒரு காரணமாய்யா... ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது’ என்று கடுகடுத்தாராம் கருணாநிதி.
தி.மு.க. கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது பற்றியும், ஸ்டாலின் பிரசாரம் பற்றியும் சிலர் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். ''கூட்டத்தை வைத்து எல்லாம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது. இதுமாதிரி கூட்டத்தை 50 வருஷமா நான் பார்க்கிறேன்’ என்றாராம்!
thanks:v

நம்பினால் நம்புங்கள்

* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!
* 7 டிரக்குகளில் எடுத்துச் செல்லக்கூடிய அளவு எடையுள்ள ‘சாக்லெட் சிப் குக்கீ’ என்ற பிரமாண்ட பிஸ்கெட்டை, அமெரிக்காவிலுள்ள ஒரு பேக்கரி தயாரித்துள்ளது.
* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.
* ஓட்டகத்தைக் காட்டிலும் சில எலிகளால் அதிக நாட்கள் நீரின்றி வாழ முடியும்.
* கனடாவிலுள்ள ஒரு பாட்டில் வாட்டர் கம்பெனி 12 ஆயிரம் - 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பனிப்பாறைகளிலிருந்து தண்ணீர் எடுக்கிறது.
* ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வெள்ளியே உள்ளது.
* ஜப்பானின் ஒசாகாவிலுள்ள ஒரு அலுவலகக் கட்டிடத்தின் நடுவே நெடுஞ்சாலை செல்கிறது!
* பூமியின் ஒட்டுமொத்த மக்கள்தொகை எண்ணிக்கைக்குச் சமமான அளவு பூச்சிகள், பூமியின் ஒருசில இடங்களில் ஒரு சதுர மைல் பரப்புக்கு உள்ளேயே இருக்கின்றன.
* பூமி முழுக்கவும் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கையை விட, இன்று சீனாவில் வாழ்வோர் அதிகம்.
* ‘மனிதனின் ஆத்மா இதயத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது’ என்பது பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கை.

Tuesday 29 April 2014

சோனியா மருமகன் வாத்ரா மீது பாஜக எழுப்பிய 13 கேள்விகள்!


சோனியா மருமகன் சொத்துக் குவிப்பு பற்றி பாஜக எழுப்பிய 13 கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சி பதில் கூற முடியாமல் திணறி வருகிறது.

பாஜாக எழுப்பிய 13 கேள்விகள் இதோ:

வங்கியில் ரொக்கக் கையிருப்பு வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே இருக்கும்போது 607251 என்ற எண் கொண்ட ரூ.7.5 கோடி காசோலை 9.2.2008 அன்று எப்படி கொடுக்கப் பட்டது? ஸ்டாம்ப் வரியாக ரூ.45 லட்சத்தை 12/8 அன்று கொடுத்தது யார்?

2. 607251 என்ற எண்ணிடப்பட்ட ரூ.7.5 கோடிக்கான காசோலை ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தைச் சேர்ந்ததா? இந்த காசோலை பணமாக மாற்ற வங்கிக்கு அளிக்கப்பட்டதா?

3.ஆங்கரேஷ்வர் ப்ராப்பர்டீஸ் என்ற நிறுவனத்தினால் பயனடையும் உரிமையாளர்கள் யார்?

4. DLF ரியல் எஸ்டேட் நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டிக்கு ரூ.6.5 கோடிக்கு காசோலை வழங்கியதன் உண்மையான நோக்கம் என்ன?

5. நிலத் தொகை ரூ.7.5 கோடி மற்றும் ஸ்டாம்ப் டூட்டி ரூ.45 லட்சம் சேர்த்து ரூ.7.95 கோடித் தொகை அளிக்கப்பட்டது டி.எல்.எஃப். அளித்த தொகையிலிருந்து செலுத்தப்பட்ட தொகையா?

6.2 லட்சம் சதுர அடியில் வணிக வளாகம் கட்ட அதன் தொழில்நுட்ப மற்றும் நிதி திறன்கள் முறையாக மதிப்பிடப்பட்டதா? அதற்கு அனுமதியை 18 நாட்களில் அவசரம் அவசரமாக அளித்தது ஏன்?

7. 5.8.2008 அன்று 2 லட்சம் சதுர அடியில் வணிக வளாகம் கட்ட சகிலைட் நிறுவனமும் டி.எல்.எஃப் நிறுவனமும் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கு உரிமம் அளிக்க அதிகாரம் படைத்தவர்கள் ஏன் பதிவு செய்யப்படாத இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்? இதன் மூலம் மாநிலத்திற்கு வரவேண்டிய கோடிக்கணக்கான வருவாய் இழப்பிற்கு என்ன பதில்?

8. வணிக வளாகம் கட்டுவது தொடர்பான கடித போக்குவரத்து மற்றும் உண்மையாக கட்டிடம் கட்டும் பணி டி.எல்.எஃப். நிறுவனமாக இருக்கும்போது ஸ்கைலைட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது எவ்வாறு?

9. ஏற்கனவே அந்த நிலத்தை ஸ்கைலைட் விற்பதான ஒப்பந்தம் போடப்பட்டு இதற்காக ரூ.50 கோடி அட்வான்ஸும் கொடுத்து முடித்த பிறகு வணிக வளாக கட்டுமான ஒப்பந்தம் ஏன் ஸ்கைலைட் பெயரில் மீண்டும் புதிப்பிக்கப்பட்டது?

10. வணிக வளாகம் மற்றும் காலனி கட்டுமானம் எந்த சட்ட அடிப்படையில் உரிமம் மாற்றப்பட்டது?

11. நிலத்தை மாற்றிக் கொடுக்கும் நடைமுறை ஆகஸ்ட், 2008-ற்கு முன்னரே முடிந்துவிட்டது. ரூ.50 கோடி வருவாய் வந்த ஸ்கைலைட் நிறுவனம் வரியை செலுத்தியதா? அப்படி செலுத்தவில்லையெனில் அபராதம் கட்ட என்ன நடைமுறை மேற்கொள்ளப்பட்டது?

12.ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் ராபர்ட் வாத்ராவின் இந்த வர்த்தக மாடலை ஆதரித்தனரா?

13. இது குறித்து தலைமை தணிக்கை ஆணையத்தின் தணிக்கை விவரங்கள் ஏன் மறைக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன?

இதுதான் அந்த 13 கேள்விகள்

இஸ்ரேல்: காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம் அறிமுகம்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம் ஒன்று இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டுள்ளது. 'ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்' என்ற இந்த இயந்திரத்தை 'வாட்டர்-ஜென்' நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன்மூலம் தற்போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.15 செலவாகும் நிலையில், வெறும் ரூ.1.50 காசுகளில் ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த எந்திரம் இயங்கும் செயல்முறை பற்றி சி.என்.என். தொலைக்காட்சிக்கு விளக்கிய நிறுவனத்தின் சி.இ.ஓ. கோகவி கூறுகையில், ''இயந்திரத்திலுள்ள 'ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்' வழியாக காற்று செலுத்தப்படுகிறது. அப்போது சுத்தமான காற்றில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படுகிறது.
பிறகு நீராவியானது திரவ வடிவமாக மாறி காற்றிலிருந்து நீரானது பிரிகிறது. அந்த நீர் இயந்திரத்திற்குள் இருக்கும் சிறிய டேங்க் மூலமாக சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு, இறுதியாக சேகரிக்கப்பட்ட நீர் 'எக்ஸ்டென்சிவ் வாட்டர் பில்ட்ரேஷன் சிஸ்டம்' வழியாக ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றது.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்து இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 250 முதல் 800 லிட்டர்கள் வரை குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.'' என்று தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை? சினிமா விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு


மனுஸ்ரீ பிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் மனுக்கண்ணன் இயக்கியுள்ள படம் அங்குசம்.

காதலையும் வன்முறையையும், பிரதானமான கருப்பொருளாக்கி உருவாகி வரும் படங்கள் மத்தியில் தகவல் அறியும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள முதல் தமிழ்ப்படம் தான் அங்குசம்.

ஊடகங்களுக்காக இன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோ திரையரங்கில் அங்குசம் திரையிடப்பட்டது. திரையீடு முடிந்த பிறகு புதுமை நிகழ்வாக அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும், தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள் என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு வெளியீட்டு விழா நடந்தது.

நேர்மையின் யதார்த்த நாயகன் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் இந்நூலினை வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் கிறிஸ்டினா சாமி பெற்றுக் கொண்டார். இன்னொரு சிறு நூலான சேவை பெறும் சட்டம் நூலையும் சகாயம் வெளியிட பத்திரிக்கையாளர் தமிழன்பன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநர் மனுக்கண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில்:-

நான் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலைப் பட்டதாரி. துபாயில் உயரதிகாரியாக நல்லவேலை பார்த்து வந்தேன். எங்களுக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. எனவே சென்னை வந்து எழும்பூர் கில்டு ஆப் சர்வீஸில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வளர்த்தோம். வானம்பாடிகள் போல வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. கடவுள் என்ன நினைத்தாரோ நான்கே ஆண்டுகள்தான், எங்கள் மகள் மனுவை எடுத்துக் கொண்டார். என்ன இருந்தும் மனுவை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. நானும் என் மனைவியும் உடைந்து போய்விட்டோம். எல்லாம் அவ்வளவுதானா இனி ஒன்றுமே இல்லையா என்று தோன்றியது. இந்தியா திரும்பினோம்.

சில பத்திரிக்கை செய்திகள் எங்களைச் சிந்திக்க வைத்தது. தகவல் உரிமைச்சட்டம் பற்றி திருச்சி வாலிபர் ஒருவர் சந்தித்த போராட்டத்தை அறிந்தோம். மகள் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தோம். நாம் ஏன் தகவல் அறியும் சட்டம் பற்றி மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்தோம். நான் சினிமாக்காரனும் இல்லை. சினிமா தொடர்பும் இல்லாதவன். படம் எடுக்க முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் அங்குசம்.

என் மகள் பெயர் மனு. அப்பா பெயர் கண்ணன். இரண்டையும் இணைத்துதான் மனுக்கண்ணனானேன். படம் இயக்கினேன்.

இந்தப் படத்தினால் பல பிரச்சனைகள். அதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை. வரிவிலக்கிற்காக போராடிப் பெற்றோம். 61 வது திரைப்பட விருதுகளுக்கு அனுப்பினோம். கிடைக்கவில்லை. பிறகு கேள்விப்பட்டோம். படம் தீவிரவாதம் பேசியது என்றார்களாம். இது தேசிய வாதம்தான் பேசியது. இவ்விழாவில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று வழிகாட்டி வரும் சகாயம் அவர்கள் நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நன்றி. ஊடகங்கள் தான் அங்குசம் படத்தை மக்களிடம் கொண்டு சென்றன. இனியும் கொண்டு சேர்க்கும். இவ்வாறு இயக்குநர் மனுக்கண்ணன் பேசினார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநில அமைப்பாளர் கிறிஸ்டினா பேசும்போது:-

இது எத்தனை தடைகள் பிரச்சனைகள் எல்லாம் தாண்டி வந்துள்ளது. அங்குசம் படத்தின் பயணத்தில் நாங்களும் உடன் இருந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. இந்த நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று போராடும் சகாயம் அவர்களுடன் இங்கே அமர்வதில் பெருமைப்படுகிறேன் என்றார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசும் போது:-

இங்கே இந்த நூல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நேர்மையான கருத்தை இந்த சமூகத்தில் விதைக்க முடியுமா என்று மனுக்கண்ணன் கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன். லஞ்சம் என்பது எழைகளுக்கு எதிரானது பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் விரோதமானது தேசத்துக்கு தடையானது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 சாதாரண மக்கள் கையில் கிடைத்துள்ள அசாதாரண ஆயுதம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி அங்குசம் படமெடுத்துள்ள இயக்குநர் மனுக்கண்ணன் நிச்சயம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நம்நாட்டு தேச விடுதலைக்கு பாடுபட்டவர்களை நாம் எப்படி மதிக்கிறோம்? என்ன தெரிந்து கொண்டு இருக்கிறோம்?

இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தாகத்தோடும் வேகத்தோடும் வருகிற இளைஞர்கள், படைப்பாளிகள், முதியவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன்.

மதுரையில் நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் அன்று திங்கள் கிழமை மக்களிடம் மனுக்கள் வாங்குவதுண்டு. பல ஊர்களிலிருந்து தொலை தூரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்படி ஒரு நாள் மதிய உணவு கூட உண்ணாமல் 3,4 மணிவரை வாங்கினேன். முடித்துவிட்டு வெளியே வந்த போது ஒரு 45 வயதுக்காரர் அழுக்குச்சட்டை கைலியுடன் வந்தார். 10 நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் இருந்தார். முன்பே வரவேண்டியதுதானே என்றேன். கூட்டமாக இருந்தது ஐயா என்றார். எங்கே இருந்தீர்கள் என்றேன். இங்குதான் இருந்தேன் என்றார். நீங்கள் யார் என்றேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றார். நான் அதிர்ந்தேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றுசொல்ல வேண்டியதுதானே என்றேன். காவலர்கள் உள்ளே விடவில்லை என்றார். உனக்கு இங்கே நிற்க உரிமை வாங்கிக் கொடுத்தது என் பாட்டன்தான் என்று சொல்ல வேண்டியதுதானே என்றேன்.

என்ன செய்கிறீர்கள் என்றேன். அவ்வளவு வறுமையில் இருந்தார். கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கிறோம் என்றார். அப்படி பெயிண்ட் அடித்ததில் கீழே விழுந்து சகோதரருக்கு அடிபட்டு காயமாகி முடியாமல் இருக்கிறார் உதவுங்கள் என்றார். திருமணம் கூட செய்யவில்லை. நான் உடனடியாக மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட உழவர் உணவகம் தொடங்க கடன் அனுமதித்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.


வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக்கப்பல் விட்டவர் வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கையிலும் காலிலும் விலங்குகள் போடப்பட்டு செக்கிழுத்தவர். அப்போது குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? அவர் செக்கிழுக்கட்டும் கை கால் விலங்குகளை கழற்றி விட்டு இழுக்கச் செய்யுங்கள் என்பதுதான். அவரது குடும்பமே வக்கீல் குடும்பம். அவரது குடும்பத்துக்கு வந்த நிலையைப் பாருங்கள். இதுதான் தியாகிகளின் நிலைமை. என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் என்ன?

நான் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் மக்களிடம் மனுக்கள் வாங்கியபோது உமாராணி என்கிற ஒரு பெண்மணி உதவி கேட்டார். 42 வயதிருக்கும். என் தந்தையின் தகுதிக்கு ஏற்றமாதிரி உதவுங்கள் ஐயா என்றார். தந்தையின் தகுதி என்றால் உங்கள் தந்தை யார் என்றேன். அவர் பாண்டமங்கலம் தர்மலிங்கம் பிள்ளை என்றார். தர்மலிங்கம் பிள்ளை சுதந்திரப் போராட்டவீரர். போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்துகளை இழந்தவர்.

அவருக்கு உடனடியாக என்னால் உதவ முடியவில்லை. வட்டாட்சியரைக் கேட்டேன். முடியாது விதிகள் இல்லை என்றார். ஏன் என்றேன். சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கு 25 வயது வரைதான் உதவித்தொகை கிடைக்கும் என்றார். அதுதான் சட்டம். நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம்? அதை மாற்ற வேண்டும் என்று போராடி தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு எழுதி கருத்துரு பெற்று சிறப்பு இனமாக கருதிட எழுதினேன். 5 ஆயிரம் பெற உதவினேன். ஐயா என்று உதவி கேட்ட உமாராணி இப்போது அண்ணா என்கிறார். என்னைப் பார்க்க சென்னை வருவதாகக் கூறினார். நானே நேரில் போய் அவரைப் பார்த்த போது அவருக்கு இரு கண்பார்வையும் போய்விட்டதை அறிந்த போது வேதனைப்பட்டேன்.

தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தியாகிகள் வரலாறுகளை எடுத்துக் சொல்லுங்கள். இந்த தேசத்தில் 1999-2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நம் உணவுக்கு பயிரிடும் விவசாயிகள் நிலை.

நம் நாகரிகம் பண்பாட்டை காக்கும் நெசவாளர்கள் வறுமையில் இருக்கிறார்கள். கோ ஆப் டெக்ஸ் இயக்குநராக இருக்கிறேன். இப்போது கண்டாங்கி சேலை மீட்டுருவாக்கம் திட்டத்தை செய்கிறோம்.

3 மாதங்களுக்கு முன் காரைக்குடி சென்றேன். அங்கு அவ்வளவு வறுமை. பல வீடுகளுக்கு கதவுகள் இல்லை. கதவுகள் போட முடியாத அளவுக்கு அவ்வளவு வறுமை. இங்கு என்ன இருக்கிறது எடுத்துச் செல்ல என்கிறார்கள். எவ்வளவு வேதனை? என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் தேடவும் கேள்வி எழுப்பவும் அங்குசம் உதவும்.

இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார்.

Sunday 27 April 2014

வாழ்க்கையின் ரகசியங்களை தெரிந்து கொள்ள உதவும் கவர்ச்சி விதியை பயன்படுத்துவது எப்படி?

 

* கவர்ச்சி விதி என்பது, புவி ஈர்ப்பு விதி போல. அனைவருக்கும் பொது.
* அனுபவங்கள் எண்ணத்தினால் மட்டுமே ஏற்படுபவை.
* சிந்தனைகளை அறிய உங்கள் உணர்வுகளை அறியுங்கள். நேர்மறையான உணர்வும் நேர்மறையான சிந்தனையும் தொடர்பு கொண்டவை.
* உங்கள் சிந்தனைகள்தான் உணர்வுகளை நிர்ணயிக்கின்றன.
* எண்ணங்களை மாற்ற உங்கள் உணர்வுகளை மாற்றுங்கள். அது சுலபமான வழி. எந்த செயல்கள் உங்கள் உணர்வுகளை மாற்றுகின்றனவோ அவை தான் Secret Shifters. நல்ல இசை, நல்ல நினைவு, பிடித்த மனிதர்கள் - உணர்வுகளை மாற்ற உதவும்.
* உலகின் மகா சக்தி அன்பு
* உங்கள் வாழ்க்கை எனும் கரும்பலகையில் உங்கள் எண்ணங்கள் தான் அனுபவங்களாய் எழுதப்படுகின்றன. உங்கள் எண்ணங்களை பராமரியுங்கள்.
* உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சக்தியும் உங்களுக்கு உள்ளே உள்ளது.
* எவ்வளவு சக்தியை உள்ளுக்குள் உணர்கிறீர்களோ அவ்வளவு சக்திகளை வெளியிலிருந்து கவர்வீர்கள்.
* உங்கள் முக்கிய பணி நல்ல உணர்வுடன் இருப்பது.
* சிறந்த தருணம்: இப்பொழுது.
*எது உங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகிறதோ தொடர்ந்து செய்வது.

கவர்ச்சி விதியை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் ஹாலில் உட்கார்ந்து ஹாயாக டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் 4 வயது மகள் (அல்லது பேத்தி) ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீர் எடுத்தவாறு உங்களை நோக்கி வருகிறாள். அதைக் கணடவுடன் பதட்டமாக “பாத்து பாத்து கீழ போட்டுரப் போறே!” என்று அலறுகிறீர்கள்! கலவரமாக குழந்தை அழுத்தி பிடிக்க நினைத்து டம்ளரை தவறவிடுகிறது.

“நான் சொன்னேன்ல...உன்னை யார் இதை எடுக்கச்சொன்னா? எனக்குத் தெரியும் நீ கீழ போடுவேன்னு!!”

குழந்தை டம்ளரை போட்டதற்கு யார் காரணம்? 
குழந்தை காயப்பட்டுவிடும் என்கிற உங்கள் பயம் “எதிர் மறை செய்தி” (கீழ போட்டுரப் போறே) சொல்கிறது. குழந்தையும் அதை காட்சிப்படுத்தி நினைக்கையில் எதிர் மறை சிந்தனை எதிர் செயலாக மாறி, நீங்கள் எது கூடாது என்று நினைத்துச் சொன்னீர்களோ, அது நடக்கிறது. பின்னர் அதற்கு நீங்கள் உங்கள் குழந்தையை காரணம் சொல்வது தான் உச்சபட்ச குற்றம்.

என்ன சொல்லியிருக்கலாம்? 
குழந்தை என்ன செய்ய வேண்டும். ஜாக்கிரதையாக பிடிக்கணும்; அவ்வளவு தானே? “டம்ளர ஒரு கையில கீழ பிடி கண்ணு. பத்திரமா மெதுவா வா!” என்றால் போதுமே!

ஆரோக்கியமோ, உறவுகளோ, செல்வமோ, வேலையோ எங்கு சிக்கல் இருந்தாலும் உங்கள் எண்ண ஓட்டத்தை கண்காணியுங்கள். எது வேண்டாம் என்பதை நினைப்பதை விட எது வேண்டும் என்று நினைத்தால் நினைப்பது நடக்கும்

Friday 25 April 2014

பயணம்,பேச்சு,சாப்பாடு, உறக்கம்: மோடியின் திட்டமிட்ட வாழ்க்கை

மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாள் ஒன்றிற்கு சுமார் 12 மணி நேரம் 2000 முதல் 3000 கி.மீ., வரையிலான தூரம் பயணம் செய்யும் மோடி, 4 முதல் 5 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் 63 வயதாகும் குஜராத் முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான மோடி, தனது அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து வரும் திட்டமிட்டு, அட்டவணையிடப்பட்ட செயல்பாடுகளே நாட்டின் உயர்பதவிக்கு அவர் தகுதியானவர் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. 
தினமும் அதிகாலையில் விழிக்கும் மோடி, ஆன்லைனில் செய்திதாள்களை வாசிக்கிறார். பின்னர் யோகா மற்றும் தியானம் செய்கிறார். இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர் ஒதுக்குகிறார். முதுகுவலியால் அவர் அவதிப்படும் நாட்களில் யோகாவிற்கு பதில் வாக்கிங் செல்கிறார். 
அவல், கிச்சடி, சப்பாத்தி்:

மோடியின் உணவு முறையும் மிக எளிமையானதாகும். எளிமையான குஜராத்தி உணவுகளையே அவர் சாப்பிடுகிறார். மேலும் பழங்கள் அல்லது பச்சை காய்கறி ஜூஸ்களை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் அவர், பகல் உணவாக அவல், இஞ்சிசாறு கலந்த தேன் ஒரு ஸ்பூன்( உணவு செரிமாணத்திற்காக) எடுத்துக் கொள்கிறார். இரவில் அரிசி கிச்சடி, தயிர், சப்பாத்தி மற்றும் காய்கறிகளையே சாப்பிடுறார். 
மோடி பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதில்லை. இதனால் தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் போது அவர் மதிய உணவை தவிர்த்து விடுகிறார். பொதுவாக பிரசாரக் கூட்டங்களி 30 முதல் 50 நிமிடங்கள் வரை பேசும் மோடி, சில நாட்களில் தனது குரலை பாதுகாப்பதற்காக பேசும் நேரத்தை குறைத்துக் கொள்கிறார். தேர்தல் பிரசார பயணங்களின் போது எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவு வகைகளை மோடி தவிர்த்து விடுகிறார். ஹெலிகாப்டர் அல்லது விமானத்தில் பயணம் செய்யும் போது ஸ்நாக்சாக குஜராத்தி சேவ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுகிறார்.
விமான பயணத்தின்போது அரசுப் பணி:

குஜராத்தில் தற்போது நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருவதால் பல விதமான பழங்கள், ஜூஸ்கள், எளிமையான ஸ்நாக்ஸ்களை மட்டுமே மோடி எடுத்துக் கொள்கிறார். சமீபத்தில் அருணாச்சலின் இடாநகர் பகுதிக்கு பிரசாரத்திற்கு செல்வதற்காக சாப்பிடாமல் காலை 6 மணிக்கே கிளம்பி விட்டார். விமான பயணத்தின் போதும் மோடி ஓய்வு எடுப்பதில்லையாம். குஜராத் மாநில அரசின் பைல்களை படித்து சரிபார்க்கும் அவர், கட்சி வேலைகள் அல்லது பிளாக்களில் எழுதுவது போன்ற வேலைகளை செய்கிறார்
கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை ராமானுஜன் 

கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்
அவருக்கு கணிதத்தின் மீது ஈடிலா ஆர்வம் வருவதற்கு ஒரு எளிய சம்பவம் காரணம் .,அவரின் நண்பன் சாரங்கபாணி நாற்பத்தி ஐந்துக்கு நாற்பத்தி மூன்று வாங்கியிருந்தார் .இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார் ,அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல் ;இன்னொன்று காரின் சினாப்சிஸ் .இந்த நூலின் சிக்கல் இது கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள்,தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும் .எப்படி வந்தது என விளக்கம் இருக்காது . அதைப்படித்து தான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார் .அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார் .பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார் .குமபகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல்,பச்சையப்பா கல்லூரி போனார் .

அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது .இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன .எண்ணற்ற நூல்களை படித்தார் .சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார் ;இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன ;கூடவே கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது .அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார் ,அவர்கள் இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத சொன்னார்கள் .
எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன.பலர் குப்பையில் போட்டார்கள் பயின்ற காட்பிரே ஹரால்ட்  ர்டிக்கு கடிதம் போனது .அதில் இருந்த வரிகள் இவை “எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்”
ஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.
அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில்,செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை ;அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை .அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு [Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன..எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.
அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது .ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள் . ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில் “எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் “என்றார்.
அவரின் பல்வேறு படைப்புகள் பல நோட் புத்தகங்களில் இருந்தன .அவற்றை கண்டு பிடித்து எடிட் செய்யும் வேலையை  ர்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் எனும் இரண்டு அறிஞர்கள் செய்து வருகிறார்கள் .ப்ரூஸ் பெர்ண்ட் என்ன சொல்கிறார் என்றால் ,”கிட்டத்தட்ட இரண்டாயிரம் முடிவுகளை இதுவரை அவரின் நோட்களில் கண்டு இருக்கிறோம் .இதில் தொன்னூறு சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது .இவ்வளவு வெற்றி விகிதம் எந்த கணித மேதைக்கும் இல்லாதது !”என்கிறார் “அவரின் கணித முடிவுகள் ஆய்லர்,ஜகோபி போன்ற கணித மாமேதைகளுக்கு இணையாக ஒப்பிடும் தரத்தில் இருந்தது” “என்றும் ஹார்டி கூறியுள்ளார்.
ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் மரணம் அடைந்தார் .அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை . கடல் கடந்து போனதற்காக அவரை ஜாதி விலக்கு செய்திருந்தார்கள் . அவர் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும்
ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று.


சிலருக்கு திடீரென்று கண்ணின் ஓரம் மின்னலைப் போல் 'பளிச்'சென்று வெளிச்சம் வெட்டி, மின்மினிப் பூச்சிகள் பறப்பதைப் போல் ஒளித் துகள்கள் கண்முன் வட்டமிட்டிருக்க லாம். அப்போது உடல் வியர்க்கக்கூடும், மூக்கில் அடைப்பு ஏற்பட்டு கண்ணில் நீர் கசியக்கூடும்.
இதுபோன்ற அனுபவங்கள் கூடுதலாகவோ, அடிக்கடியோ ஏற்படக்கூடும். உடன், நெற்றிப் பொட்டிலும், கண்ணின் பின்புறமும் லேசான வலி தொடங்கலாம். பின்னர் தலை வலி அதிகமாகி, ஒரு பக்கமாக இடிக்கத் தொடங்கலாம். வெளிச்சம் கண்களைக் கூசச் செய்யும்.
காபியின் மணம்கூட வயிற்றைப் புரட்டும். குமட்டலுடன், சாப்பாட்டைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். மருந்து, மாத்திரைகள் மூலம் தற்காலிக நிவாரணம் தேடினாலும், தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். சரியாகச் சாப்பிட முடியாது, உறங்கி ஓய்வெடுக்கக் கூட முடியாது.

நம்மில் பலருக்கு இது போன்ற அல்லது சிறிது வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். இது ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரேன் எனப்படும் பிரச்சினை. 

மூளையின் நரம்பு செல்கள் அல்லது ரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களால் வருவது. இதுகுறித்த விவரங்கள் இதுவரை முழுமையாக அறியப்படவில்லை.

பொதுவாக உலகில் எல்லோருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் தலைவலி வந்து போகிறது. மக்கள் ஆலோசனைக்காக மருத்துவரை அணுகும் முதல் மூன்று காரணங்களில் தலைவலியும் ஒன்று என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆக, தலைவலி என்பது உலகளாவிய பிரச்சினை. 18 வயது முதல் 65 வயது வரை 50 முதல் 75 சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுகிறார்கள்.

ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரேன், இறுக்கம் சார்ந்த தலைவலி அல்லது 'டென்ஷன்' தலைவலி இவை இரண்டும் பரவலாகக் காணப்படும் தலைவலி வகைகள். இவை சுமார் 40 சத வீதம் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக, 50 சதவிகிதத்துக்கும் அதிகமான தலைவலிகள், மருத்துவ ஆலோசனை இன்றி கைவைத்தியமாக, சுயசிகிச்சை முறையிலேயே மக்களால் அணுகப்படுகின்றன. இது தவறானது மட்டுமல்ல, ஆபத்தான தும்கூட என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சிறப்பு மருத்துவர்களைத் தேடி வருபவர்களிலும் சுமார் 10 சதவீதம் பேர், அதிக அளவில் தாங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும், நீண்ட நாட்களாய், தினமும் வருகின்ற தலைவலி நோயால் பீடிக்கப்படுகின்றனர்.

வலி நீக்க அவர்களாக உட்கொள்ளும் மருந்துகளே, நாளடைவில் அவர்களுக்குத் தலைவலியை உண்டாக்குகின்றன என்பது வேதனையான உண்மை. இன்றைய நெருக்கடியான வாழ்க்கையின் பிரச் சினைகள், மன ஏற்ற இறக்கங்கள், பொதுவாழ்வின் சிக்கல்கள், மனிதநேயமற்ற
உறவுகள், சக மனிதர்கள், உரிமை பாதிப்புகள் போன்றவை ஏற்படுத்தும் மனஇறுக்கமும், எப்போதும் அலைபாய்கின்ற மனதின் படபடப்பு நிலையும் டென்ஷன் தலைவலிக்குக் காரணங்களாகின்றன. 

இது டிஜிட்டல் உலகம். கணினி வேலை, கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சியின் தாக்கம், செல்போன் போன்றவையும் டென்ஷன் தலைவலிகளை அதிகப்படுத்துகின்றன.
தலைவலிகளால் இழக்கப்படுகின்ற மனிதத் திறமைகளும், கால விரயமும் மனித மேம்பாட்டுக்கு மிகப் பெரிய தடைக்கற்களாய் உள்ளன. 

சரியான நேரத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையும், உரிய சிகிச்சையும் தலைவலியிலிருந்தும், அதனால் ஏற்படுகின்ற பல இழப்புகளிலிருந்தும் நம்மைக் காக்கும். தலைவலிதானே என்று சாதாரணமாய் எடுத்துக் கொண்டால், அதன்பின் விளைவுகளுக்கு நாமே பொறுப்பாக வேண்டும்!

நரம்புகளை உறுதியாக்கும் பலாப்பழம்


பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.

இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.

இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி , தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

• இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

• பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

• ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

• குழந்தைகள் இந்த பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

• வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

• பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

• வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

• நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.
வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது.

பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம்.
இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பதை பார்க்கலாம்..

* திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் வரையிலும், ஆப்பிள்கள் ஒரு மாதம் வரை, சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் வரை, அன்னாசி (முழுசாக) 1 வாரம் வரை, (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.

* புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் வரை, முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வரை, வெள்ளரிக்காய் ஒரு வாரம் வரை, தக்காளி 1-2 நாட்கள் வரை, காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் வரை, காளான் 1-2 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.

* வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் வரை, சமைத்த மீன் 3-4 நாட்கள் வரை, பிரஷ் மீன் 1-2 நாட்கள் வரை, ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் வரை, பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள் வரை, உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் வரை, பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் வரை, சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனாலும் இறைச்சி வகைகளை தினமும் பயன்படுத்துவது நல்லது.

* பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் வரை, பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் வரை, மோர் 2 வாரங்கள் வரை, தயிர் 7-10 நாட்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.
* காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு உணவு முறைகள்

பரம்பரைக் காரணங்களால் சிறுவயதிலேயே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் துவங்கி விடும். எனவே பரம்பரையாக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

பரம்பரைக் காரணங்களால் மட்டுமில்லாமல் நமது உணவு விஷயங்கள் மற்றும் அதிகமாக காணப்படும் நீரழிவு நோய் ஆகியவையும் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
பரம்பரைக் காரணங்களால் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது என்றால், கொலஸ்ட்ரால் அளவுகள் சாதாரண அளவை விட பல மடங்குகள் உயர்ந்திருக்கும்.

நோய் அறிகுறிகளும், பிற பாதிப்புகளும் ஏற்படும். எனவே இவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பரம்பரைக் காரணங்கள், மரபணு கோளாறுகள் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். இதனால் இவர்களின் வாரிசுகளுக்கு இப்பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.
சிறுநீரக நோய்கள், நாளமில்லாச் சுரப்பி நோய்கள், தைராய்டு நோய்கள் போன்றவைகள் காரணமாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கக் கூடும்.
எனவே நோயாளிகளுக்கு இதுபோன்று ஏதாவது நோய் குறிப்பாக நீரழிவு, ரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவுகள் குறித்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க் ஃபுட், டின் உணவுகள் அதிக கலோரிகள் தருபவை. டிரான்ஸ் வகை கொழுப்பு நிறைந்தவை.

நார்ச் சத்து குறைந்தவை. உப்பு மிகுந்தவை. வைட்டமின்களும், தாது உப்புகளும் குறைந்தவை. எனவே இது குறித்து விழிப்புணர்வு தேவை. உடல் எடை பருமனாக இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்கள் இவற்றைக் குறைக்க வேண்டும். உணவில் அதிகளவு காய்கறி, கீரைகள், தானியங்கள், பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் தங்களின் ரத்த குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். சமைக்கும் எண்ணெய்யில் கவனம் தேவை. , ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்யைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

வெண்ணெய், நெய், டால்டா, கொழுப்பு மிகுந்த பால், இறைச்சி, கல்லீரல், சிறுநீரகம், இறால் ஆகிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், ஆகிய பூரிதமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்யைத் தவிர்த்து விட வேண்டும். பேக்கரி உணவுகள், கேக் வகைகளையும் தவிர்த்து விட வேண்டும்.

ஆலிவ் எண்ணெய், safflower எண்ணெய், Flax Seed Oil, Canola Oil ஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும் ஒமேகா-3 நிறைந்த மீன்கள், கொட்டைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பம் தரிப்பதில் மூட நம்பிக்கைகள்

மூட நம்பிக்கைகளைப் பின்பற்றுவதில் படித்த, படிக்காத பெண்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. குறிப்பாக உடல் நலம், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் காலங்காலமாகத் தொடர்கிற மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிய இன்னும் பல பெண்கள் தயாராக இல்லை. கர்ப்பம் தரிப்பதிலும், கர்ப்பம் தரித்த பிறகும் அவர்கள் கேள்விப்படுகிற பல தகவல்கள் மூட நம்பிக்கைகளின் உச்சமாக இருந்தாலும், அவற்றை ஏற்பதா, மறுப்பதா என்கிற குழப்பமும், தவிப்பும் அனேகம் பேருக்கு உண்டு. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு நம்பப்படுகிற அத்தகைய சில மூட நம்பிக்கைகளைத் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

உடற்பயிற்சி செய்வது, எடை தூக்குவது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை எல்லாம் கர்ப்பம் தரிக்கத் தடையாக அமை யக்கூடியவை. இந்தக் கருத்து பல பெண்களுக்கும் உண்டு. இதை உண்மையென நம்பிக் கொண்டு, மாதவிலக்கான 15வது நாள் முதல் எந்த வேலையையும் செய்யாமல், உடற்பயிற்சி செய்யாமல், சாப்பிடுவதையும், ஓய்வெடுப்பதையும் மட்டுமே செய்கிற பெண்கள் பலர். கருத்தரிப்பதை இவற்றில் எந்தச் செயலும் தடுக்காது.

மாறாக, வேலையே செய்யாமல், உடலுழைப்பின்றி, ஓய்வெடுப்பதன் விளைவாக உடல் எடை கூடி, ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் உண்டாகி, சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைகள்தான் வரும். மாதவிலக்கு சுழற்சி மாறுபடும். அதன் விளைவாக இயல்பான கருத்த ரிப்பே கூட பாதிக்கப்படலாம்.
அடிக்கடி கொள்கிற தாம்பத்ய உறவினால் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படும். இதுவும் ஒரு தவறான கருத்தே. சிலர் கருத்தரிக்கிற நாளை, நேரத்தை எல்லாம் கணக்கு பண்ணி, உறவு கொள்வார்கள். பொதுவாக 13 முதல் 18 நாளில் கருமுட்டை வெளியாகும். ஒரு சிலருக்கு இதுவும் முறையான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்களுக்கே கூட 23 - 24 நாட்களில்கூட வெளியாகும். ஆனால், சிலர் 20 நாட்களுக்குப் பிறகே பயந்து கொண்டு உறவைத் தவிர்ப்பார்கள்.
குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பவர்களுக்கு இருமுறை கருமுட்டை வெளியேறலாம். எனவே தாம்பத்ய உறவு என்பது ஏற்க னவே கரு உருவாகியிருந்தாலும் அதைப் பாதிக்காது. ஸ்கேன், ஐயுஐ போன்ற சிகிச்சைகள் கூட கர்ப்பத்தைப் பாதிக்காது. கொழுப் பான உணவுகள்தான் கருத்தரிப்பை ஊக்கப்படுத்தும். இந்தக் காலத்துப் பெண்கள் பலரும் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் திருமணமாகி வரும் போது, மாமியாரானவர், போஷாக்காக நிறைய சாப்பிட்டால்தான் சீக்கிரம் குழந்தை உண்டா கும், ஒல்லியான உடல்வாகு கருத்தரிக்க ஏற்றதல்ல என்று சொல்லிச் சொல்லியே நிறைய சாப்பிடத் தூண்டுவார்கள். இதுவும் தவறா னது. கருத்தரிக்க புரதம் நிறைந்த உணவுகள் அவசியம். பால் மற்றும் பால் உணவுகள், கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டக் கூடி யவை என்பதால் அவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் இருப்போர் பப்பாளி, அன் னாசி, எள், கருப்பு திராட்சை போன்ற வற்றை சாப்பிடக் கூடாது, அவை கருவைக் கலைக்கும் என்பதும், துரியன் பழம் சாப்பிட் டால் கருத்தரிக்கும் என்பதும்கூட தவறான நம்பிக்கைகளே.

கிராமப் புறங்களில் குழந்தையின் தொப்புள் கொடியைக் காய வைத்துப் பொடித்து சாப்பிட்டால், கருத்தரிக்கும் என்கிற அளவுக்கு பயங்கரமான மூட நம்பிக்கைகளை இன்றும் பார்க்கலாம். உணவு ஊட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும். கொழுப்பு தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி மேலே சொன்ன அத்தனை தவறான நம்பிக்கைகளையும் நினைத்துப் பெண்கள் பயப்படத் தேவையில்லை... என மூட நம்பிக்கைகளைத் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர்ஜெயராணி.
இயற்கைக்கு 'ஹலோ’... நோய்களுக்கு 'குட்பை’!

''வெளிப்புறத் தோற்றத்துக்கு அதிகளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் நாம், ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் பெரிதாக மெனக்கெடுவதில்லை!''
- முதல் வரியிலேயே சாடுகிறார், சென்னை, அண்ணாநகர், 'இயற்கைப் பிரியன்’ இரத்தினசக்திவேல்.
''இன்றைய அவசர உலகத்தில், இயற்கை மருத்துவத்துக்கு நேரம் ஒதுக்குவதென்பது, பலருக்கும் சிரமமானதாக இருக்கும். ஆனால், இயற்கை உணவைப் பழக்கப்படுத்துவது நிச்சயம் எளிதானதே!'' எனும் இரத்தினசக்திவேல்... இயற்கை உணவு வகைகள், உடற் பிரச்னைகளுக்கான இயற்கை உணவுப் பழக்க தீர்வுகள் பற்றி, இதுவரை எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். இங்கே, அவற்றின் சாரம் தந்தார் நமக்கு.
இயன்றவரை இயற்கை உணவு!
''நாம் உண்ணும் உணவுதான், ஆரோக்கியத்தை ஆதரிப்பதும், எதிர்ப்பதும். மேலைநாட்டினரின் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், நம் ஆரோக்கியத்துக்கு நாமே எதிரியாவோம். நாம் வாழும் இடம், இங்கே விளையும் பொருட்கள், இதன் காலச்சூழல் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து, அனுபவத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டதுதான்... நம்முடைய உணவு முறை. அதைத்தான் முன்னோர் கடைப்பிடித்து வந்தனர். அவர்களின் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், ஆரோக்கியம் எப்போதும் நம்முடன் இருக்கும்.
இயன்றவரை இயற்கை உணவு, இயலாதபோது சமையல் உணவு என என் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட பின், கண் பிரச்னை, மூச்சுத் திணறல், மலச்சிக்கல், அல்சர் என என்னைப் பிடித்திருந்த பல பிரச்னைகளிலிருந்தும் நான் விடுபட்டது உண்மை.

ஒரு நாளின் மூன்று வேளை உணவை இப்படிப் பிரித்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை சமைக்காத உணவு,
ஒரு வேளை அரிசி, சர்க்கரை, உப்பு சேர்க்காத உணவு,
ஒரு வேளை எண்ணெய் போன்றவை சேர்க்காமல் ஆவியில் வெந்த உணவு.
இதனால் செலவும் குறையும், குறைவில்லாத வாழ்வும் நிலைக்கும்.
வெள்ளை உணவுகளை விலக்குங்கள்!
வெண்மையாக, 'பளிச்’ என்று கவரும் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது என்று சபதம் எடுப்பது மிகச்சிறந்தது. உதாரணமாக, அரிசி, மைதா, உப்பு, சர்க்கரை (ஜீனி), பால் போன்றவை. இவையாவும் நம் உடலின் புரதச்சத்தை அதிகரிக்கச் செய்து, உடல் பருமனையும், இன்னும் பிற பிரச்னைகளையும் கொடுக்கும். பச்சையாக இருக்கும் கீரை வகைகளும், கேரட், பீட்ரூட், தக்காளி போன்ற வண்ணமான காய்கறிகளும் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.
இன்று பெரும்பாலானவர்கள், குறிப்பாக இளம்வயதினர் மூட்டுவலி, உடல் எடை அதிகரித்தல், தலைமுடி உதிர்வது, ஹார்மோன் சமச்சீரின்மை என்று குறிப்பிட்ட நோய்களுக்கு அதிகம் இலக்காகிறார்கள். ஆனால், 'நோய் ஒன்றே... பல அல்ல' என்பது இயற்கை மருத்துவக் கோட்பாடு. அதாவது, ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை, ரத்த சூட்டின் தன்மையை வைத்து, நோய் காரணிகளைக் கண்டறிவார்கள். ஆனால், இயற்கை மருத்துவத்தில் ரத்த சுத்தத்தை வைத்துக் கண்டறிவார்கள். அதனால், ரத்தம்தான் நோய்க்கான முதல் காரணி. இயற்கை மருத்துவத்தில் சிலசமயம் ஒரே மருந்துகூட, பல பிரச்னைகளைத் தீர்க்கும். இத்தகைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், உணவைச் சரியான பதத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான்.
பெரும்பாலும் மேலைநாட்டு உணவுக் கலாசாரத்தையே சிரத்தை எடுத்து பின்தொடர்கிறோம். காய்கறிகளைக் கழுவி நறுக்க வேண்டும்;
நறுக்கிய பின் கழுவினால், அந்த உணவின் பலன் நீரோடு சென்றுவிடும்.
அதேபோல வெள்ளரி, கேரட், ஆப்பிள் போன்றவற்றை கழுவியவுடன் கடித்துச் சாப்பிட வேண்டும், நறுக்கக் கூடாது.
புரதக்குறைவே பொடுகுக்குக் காரணம்!
பெண்களின் தலையாய பிரச்னை, தலைமுடி. குளித்தபின்பு கேசத்தை 30 நிமிடங்கள் நன்றாக விரித்து உலரவிட வேண்டும். ஆள்காட்டி விரலை கேசத்தின் வேர்ப்பகுதியில் நன்கு அழுத்தி எடுத்துப் பார்க்கையில், ஈரப்பசை இன்றி நன்றாக காய்ந்திருந்தால் மட்டுமே தலைமுடியை பின்னல் இடவேண்டும்.
குளிக்கும்போதும், எண்ணெய் தேய்க்கும்போதும் கைவிரல்களை எதிரும் புதிருமாக தேய்த்து மசாஜ் கொடுக்கலாம். கறிவேப்பிலை, நெல்லி, கரிசலாங்கண்ணி போன்றவற்றை சேர்த்து, அரைத்து, வடிகட்டி, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயோடு கலக்க வேண்டும். இதை சூரிய வெப்பத்தில், பத்து நாட்களுக்கு தினமும் சுமார் 8 மணி நேரம் வைத்து சூடேற்ற வேண்டும். அல்லது சிம்னி விளக்கில் லேசான பதத்தில் சூடாக்கலாம். பிறகு, தினமும் தலைக்குத் தேய்த்துக்கொள்ளலாம்.
பொதுவாக பொடுகு, தலைசூடு, தலைபாரம், தலைவலி, தும்மல், சளி, இருமல், மூக்கில் நீர்வடிதல், மூச்சு விடுவதில் சிரமம் இப்படி பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு உண்மை காரணம்... நம் உடலில் இயற்கை புரதக்குறைவு ஏற்படுவதே.

கறிவேப்பிலையை சாறு, கீர், சூப், துவையல் என உணவில் ஏதாவது ஒரு வகையில் அதிகம் சேர்க்க வேண்டும்.
காளான், தேங்காய், முளைகட்டிய தானியம் எடுத்துக்கொள்வதும் புரதம் கிடைக்கச் செய்யும்.
குட்பை சொல்லுங்கள்... காபி - டீக்கு!
தாதுக்களும், விட்டமின்களும் உன்னத உடல் மாளிகையின் உறுதியான தூண்கள். அவற்றின் இருப்பிடம்... கனிச்சாறுகளே. ஆனால், வெள்ளையர்கள் வெளியேறினாலும்... அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற காபி, டீயின் அடிமைகளாக இருக்கிறோம் நாம். காலையில் காபி, டீ அருந்துவது, மிகத்தவறான உணவுப் பழக்கம். இரவில் பிற உறுப்புகள் இயங்காமல் வயிறு, ஜீரண உறுப்புகள் மட்டும் இயங்கும். எனவே, காலையில் வயிற்றுப் பகுதியானது, பிற பகுதிகளைவிட அதிக சூடாக இருக்கும். அப்போது சூடாக காபி, டீ குடித்தால், அது நரம்பு மண்டல செயல்பாடுகளை சீர்குலைக்கும்.
எனவேதான் நம் பாட்டனும், பூட்டனும் காலையில் எழுந்தவுடன் வயிற்றுக்கு குளுகுளுவென 'நீச்சத்தண்ணி’ (நீராகாரம்) குடித்தார்கள். நாம் பச்சைத் தண்ணீராவது குடிப்போம்... தினமும் காலை வெறும் வயிற்றில்! இதுதான் அமிர்தம். கூடவே, பழச்சாறுகளை நாடலாம். அதிலும் இந்த வெயிலுக்கு, மிக நல்லது. கோடையில் 'சூடு’ பிடித்துக்கொள்வதால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுவார்கள். ஒரு காட்டன் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து, குழந்தையின் அடிவயிற்றில் வைத்திருந்தாலே போதும்... சூடு சட்டென்று விலகி ஓடிவிடும்.
thanks:v
இந்தியாவைத் தீர்மானிக்கும் 25 பேர்!

நுங்ரா, காலாகாலி, மாராமாரி, கந்தாகோல், விஷம் - இந்த ஐந்தும் வங்காளி வார்த்தைகள். இந்தியா வின் அரசியலை, தேர்தல்களை ஆய்வு செய்ய வந்த நார்வே மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் மேற்கு வங்கக் கிராமத்துக்குப் போனபோது, ஒரு கிராமவாசி இந்த ஐந்து வார்த்தைகளையும் சொல்லியிருக்கிறார்.
'அரசியல் என்றாலே அழுக்கு (நுங்ரா), அரசியல்வாதிகள் தவறுகளை ஊக்குவிப்பவர்கள் (காலாகாலி), தேவை இல்லாமல் சண்டை போடுபவர்கள் (மாராமாரி), பிரச்னைகளை வளர்ப்பவர்கள் (கந்தாகோல்). மொத்தத்தில் அவர்கள் சமூகத்தின் 'விஷம்’ போன்றவர்கள்’ என்றாராம் அந்தக் கிராமவாசி.
அரசியல் எவ்வளவு கீழானதாக மாறிப்போனாலும், தேர்தல்தான் ஜனநாயகத்துக்கு உயிர் செலுத்தும். அம்பானிக்கும் ஒரே ஓட்டு; அய்யாசாமிக்கும் ஒரே ஓட்டு. வாக்குச்சாவடிக்கு வெளியே இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், ஓட்டின் மரியாதை ஒன்றுதான். அதனால்தான் அதிகார மமதை கொண்டவர்கள்கூட சந்து பொந்துகளுக்கு வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்.
இந்தியா எனப்படும் பரந்த பரப்பில், சமீப 'தெலங்கானா’வையும் சேர்த்து 29 மாநிலங்கள். ஆனால், 543 உறுப்பினர்கள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தை ஆறு பெரியண்ணன்கள்தான் ஆட்சி செலுத்துகிறார்கள்.
ஆறு பெரியண்ணன்கள்!
பிரதமர்களை தனது உதிரத்தில் உற்பத்தி செய்யும் பிரதேசம், உத்தரப்பிரதேசம். நம்மைவிட இரண்டு மடங்கு பெரியது.
80 எம்.பி-க்கள் இந்த மாநிலத்தில். இதை மொத்தமாகக் கைப்பற்றித்தான் காங்கிரஸ் உயிர் வாழ்ந்தது; முலாயம் சிங், மாயாவதி வந்த பிறகுதான் அதில் மண் விழுந்தது. இப்போது அமித்ஷா ஆபரேஷன்களில் கதிகலங்கி... 52 தொகுதிகளை பா.ஜ.க. பிடிக்கும் என எல்லா கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. அதனால்தான் குஜராத் மோடி, இங்குள்ள வாரணாசியில் பிடிவாதமாக நிற்கிறார். உ.பி. ராசி, பிரதமர் ஆக்கும் என்ற நம்பிக்கையில், ராகுலும் இங்குதான் போட்டியிடுகிறார்.
உ.பி. (80), மகாராஷ்டிரா (48), ஆந்திரா (42), மேற்கு வங்கம் (42), பீகார் (40), தமிழ்நாடு (39)... ஆகிய 6 மாநிலங்களில் உள்ள தொகுதிகளைக் கூட்டிப் பார்த்தால், 291 எம்.பி-க்கள். மொத்த இந்தியா அளிக்கும் எம்.பி-க்களில் இது சரிபாதியைவிட அதிகம். இந்த ஆறு மாநிலங்களில் ஒரு தேசியக் கட்சி, ஒழுங்காகக் கட்சி நடத்தினாலே போதும்... மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்!
முலாயம், மாயாவதி, காங்கிரஸ், பா.ஜ.க. என நான்கு முனைப் போட்டி உ.பி-யில். இதில் காங்கிரஸ் பின்தங்கியே இருக்கிறது. மற்ற இருவரையும் மோடி, முந்திக்கொண்டு இருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டு. பா.ஜ.க-வுடன் சிவசேனா கூட்டு. பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரேவும், மருமகன் ராஜ் தாக்கரேவும் தனித்தனிக் கட்சிகள் நடத்தினாலும் பா.ஜ.க-வை ஆதரிப்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆக, யார் வென்றாலும் லாபம் பா.ஜ.க-வுக்குத்தான்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் பின்தங்கியே இருக்கின்றன. அங்கே திரிணாமுல் காங்கிரஸ் மம்தாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மட்டுமே போட்டி. மம்தாவுடன் கூட்டுச்சேர மோடி நினைத்தார். ஆனால், சிறுபான்மையினர் வாக்கு போய்விடும் என்பதால் மம்தா மறுத்தார். ஆனாலும் இவரை மோடி விமர்சிக்கவில்லை. சகோதர சகோதரிகளாகவே பாவித்துக்கொள்கிறார்கள். ஏற்கெனவே பா.ஜ.க. கூட்டணியில் மம்தா இருந்தவர் என்பதாலும், அவர் காங்கிரஸுடன் சேர மாட்டார் என்ற நம்பிக்கையிலும் மோடி இருக்கிறார்.
பீகார் மாநிலத்தில், லாலுவுடன் கூட்டுசேர்ந்து போராடுகிறது காங்கிரஸ். 11 சீட்டை அவரிடம் இருந்து வாங்குவதற்குள், 'போதும் போதும்’ என்றாகிவிட்டது காங்கிரஸுக்கு. இனி ஜெயிக்க வேறு வேண்டும். நம் ஊரைப் போலவே லாலுவும் நிதிஷ்குமாரும் மாறி மாறி ஆண்டு வரும் மாநிலம் பீகார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார், மோடியைப் பிடிக்காமல் கூட்டணியைவிட்டு விலகினார். காங்கிரஸ் தன்னைக் கடத்திச் செல்லும் என்று நினைத்தார். ஆனால், அவரது எதிரியான லாலுவோடு அவர்கள் சேர்ந்துவிட்டார்கள். மோடியாவது தன்னைச் சமாதானம் செய்வார் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. 'மோடி, பிரதமர் ஆக முடியாது. ஜனாதிபதி மாளிகை படத்துக்கு முன்னால் வேண்டுமானால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று நிதிஷ் பிரசாரம் செய்து வருகிறார்.
அங்கு லாலு, நிதிஷை விட்டால் யார் இருக்கிறார்கள் என்று தேடிய மோடி, பஸ்வானைப் பிடித்தார். ஒருகாலத்தில் நிதிஷ் விசுவாசியாக இருந்து, இன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக இருக்கும் உபேந்திர குஷ்வஹாவையும் சேர்த்துக்கொண்டார். பீகாரில் ஒரு மோடி இருக்கிறார். அவர் பெயர் சுசில்குமார் மோடி. அவர்தான் இந்த வேலைகள் அனைத்தையும் பார்க்கிறார்.
ஆந்திராவை தெலங்கானா, சீமாந்திரா என இரண்டாகப் பிரித்து, தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டது காங்கிரஸ். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய காங்கிரஸை, தெலங்கானா மக்கள் ஆதரிப்பார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், இதற்காகத் தொடர்ச்சியாகப் போராடிய 'தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி’ சந்திரசேகர ராவ் அந்த வாக்குகளை அள்ளிக்கொள்வார். இவரை காங்கிரஸுடன் இணைக்க முயற்சித்தார்கள். முடியவில்லை என்றதும் அவரோடு இருந்த நடிகை விஜயசாந்தியை இழுத்துப் போய்விட்டது காங்கிரஸ். பா.ஜ.க., சாமர்த்தியமாக இரண்டு மாநிலங்களிலும் செல்வாக்குக்கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனியாக நிற்கிறார். இவர் வென்றாலும் காங்கிரஸை ஆதரிக்க மாட்டார் என்பது இவர்களது திருப்தி.
தமிழ்நாட்டின் கதை அனைவரும் அறிந்ததுதான். ஜெயலலிதா, கருணாநிதியின் ஆளுகையில் மாறி மாறி இருக்கும் தீவு இது. இங்கு காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது. தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ளது பா.ஜ.க. தங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட தங்கள் எதிரியான காங்கிரஸுக்கு எந்தத் தொகுதியும் கிடைக்காது என்ற சந்தோஷம் அவர்களுக்கு. ஜெயலலிதா, கருணாநிதி யார் வென்றாலும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை வேறு!
இப்படி 29 சதவிகித எம்.பி-க்கள் கொண்ட இந்த ஆறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸும் பா.ஜ.க-வும் எத்தனை இடங்களைப் பிடிப்பார்கள் என்பதே முக்கியம். உ.பி, மகாராஷ்டிரா, ஆந்திரா... மூன்றை பா.ஜ.க-வும், உ.பி., பீகார், மகாராஷ்டிரா ஆகிய மூன்றை காங்கிரஸும் மலை போல நம்பி இருக்கின்றன. மேற்கு வங்கத்தை இருவருமே மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டை காங்கிரஸ் நினைப்பதே இல்லை!
ஆறு சின்னண்ணன்கள்!
அந்த ஆறு பெரிய அண்ணன்களுக்கு அடுத்த சின்ன அண்ணன்கள் ஆறு பேர். ஆட்சிக் கட்டிலை எட்டிப் பிடிக்கப் போகிறவர்களின் காலைப் பிடித்துத் தூக்கிவிடவேண்டிய மாநிலங்கள் மத்தியப்பிரதேசம் (29), கர்நாடகம் (28), குஜராத் (26), ராஜஸ்தான் (25), ஒடிசா (21), கேரளா (20) ஆகியவை.
அடுத்து பா.ஜ.க. ஆட்சிதான் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் சொல்வது, மத்தியப்பிரதேசம், கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களை வைத்துத்தான். இதில் கர்நாடகம் நீங்கலாக மற்ற மூன்றிலும் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. கர்நாடகாவில் கட்சியை இரண்டாக உடைத்த எடியூரப்பா மீண்டும் உள்ளே வந்துவிட்டார்.
எடியூரப்பா உள்ளே வருவார் என்று கர்நாடகா காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. குஜராத்தில் மோடிக்கு எதிராக இப்போதுதான் 'விகாஸ் கோஜ்’ பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளது அந்த மாநில காங்கிரஸ். ஆதித்திய ராஜே சிந்தியாவை மட்டுமே மத்தியப்பிரதேச காங்கிரஸ் நம்புகிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு சமீபத்தில்தான் தோற்கடிக்கப் பட்டது. எனவே, இந்த மாநிலங்களில் மூச்சுத் திணறுகிறது காங்கிரஸ்.
இந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு நம்பிக்கை தருவது கேரளா மட்டும்தான். மார்க்சிஸ்ட்டும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கும் மாநிலம் இது. அடுத்த பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவும் காங்கிரஸுக்கு இருக்கிறது. எனவே, தெம்போடு இருக்கிறது காங்கிரஸ். இங்கு பா.ஜ.க. இல்லை என்பது காங்கிரஸுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. மாதா அமிர்தானந்த மயி பிறந்த நாளில் கலந்துகொண்டு எப்படியாவது அங்கும் அக்கவுன்ட் திறந்துவிடப் பார்க்கிறது பா.ஜ.க.
ஒடிசாவைப் பொறுத்தவரை அங்கு எப்போதும் பட்நாயக் ஆட்சிதான். பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக்தான் எப்போதும் வெல்வார். காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியின் பலம் இவர்.
இந்த ஆறு மாநிலங்களின் மொத்த தொகுதிகள் 149.
ஆபத்பாந்தவன்கள்!
ஐந்தாறு சீட்டுகளில் ஆட்சி ஊசலாடும் போது, காப்பாற்றும் மாநிலங்கள் என்று இவற்றைச் சொல்லலாம்.
அசாம் (14), ஜார்கண்ட் (14), பஞ்சாப் (13), சட்டீஸ்கர் (11), ஹரியானா (10), டெல்லியும் ஜம்மு-காஷ்மீரும் தலா 7 என மொத்தம் 76 தொகுதிகள் இந்தச் சிறுபான்மைக் கணக்குக்கு!
டெல்லியை பா.ஜ.க-வும் ஆம் ஆத்மியும் பங்கு போட்டுக்கொள்ளும். காங்கிரஸைக் காப்பாற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு- காஷ்மீரில் இருக்கிறது. பா.ஜ.க-வைக் காப்பாற்றும் சிரோன்மணி அகாலிதளம் பஞ்சாபில் இருக் கிறது. இரண்டுக்குள்ளும் வராத பிரபுல்ல குமார் மகந்தாவின் அசாம் கன பரிஷத், அசாமில் வேர் கொண்டுள்ளது. சிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா,காங்கிரஸை ஆதரிக்கலாம். ஹரியானாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் ஹரியானா ஜன்தி காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கும். சட்டீஸ்கரில் தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி!
இவை போக உத்தரகாண்ட் முதல் புதுச்சேரி வரையுள்ள 16 குட்டி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தமே 27 எம்.பி-க்கள்தான் தேர்வு செய்யப்படுவார்கள். ஆக, இந்தக் கணக்கின்படி வரும் 543-ல் 272-ஐ இழுப்பதுதான் இந்தியத் தேர்தல். இதில் 272 ... என்று இலக்கு அறிவித்துள்ளார் ராஜ்நாத் சிங். அதை நம்புகிறார் நரேந்திர மோடி. ஆனால், ராகுல் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை. இந்தியாவில் மிக அதிகமாக அலையும் இந்த மூன்று பேருமே விருச்சிக ராசிக்காரர்கள். யாருக்கு யோகம் என்று ஜாதகம் அல்ல... ஜனங்கள் சொல்ல, மே 16 வரை இடைவேளை!
thanks:v