Saturday 29 March 2014

ரஜினி என்னும் மாயமான்


அது என்னமோ தெரியலை தலைவரைப் பற்றி எழுதாமல் தூக்கம் வருவதில்லை. கோச்சடையான் வெளியாகிறது என்றதும் திருப்பதிக்கு முடி தானம் செய்ய ஒரு குரூப் கிளம்பியது. பழனிக்கு பாத யாத்திரை, காவடி தூக்குதல் என்று எட்டு திக்கும் திணறுகின்றன. இந்த நேரத்தில் நாம் மட்டும் வேடிக்கைப் பார்த்தால் எப்படி?

தலைவரைப் பற்றி பேசும் எழுதும் அனைவரும் குறிப்பிடும் சில விஷயங்கள் இவை. தலைவரைப் போல் வள்ளல் யார்? அவரைப் போல் தன்னலம் கருதா தலைவன் யார்? அவரைப் போல் எளிமை உண்டா?

இந்த கேள்விகளையெல்லாம் சீரியஸாக எடுத்து ஆராய்ந்தால் தலைவர் அப்படியெல்லாம் எந்த வரமும் தமிழகத்துக்கோ, அவரின் ரசிகர்களுக்கோ தந்ததில்லை என்பது தெரிய வரும்.

அவரின் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் குறித்து சர்ச்சை கிளம்பிய போது, என்னுடைய சம்பாத்தியத்தில் பெரும்பகுதியான இந்த மண்டபத்தை தமிழ் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அறிவித்தார்.

அதனை அன்று எல்லா பத்திரிகைகளும் கொண்டாடி எழுதின. தலைவர் தமிழக மக்களுக்கு மண்டபத்தை அர்ப்பணித்ததாக அறிவித்து பல பத்து வருடங்கள் ஓடிவிட்டது. தமிழக மக்களுக்கு அந்த மண்டபம் எந்தவகையிலாவது பயன்பட்டிருக்கிறதா? அதை இன்றும் ஆண்டு அனுபவிப்பது யார்? தலைவரை வள்ளல் என்று ஓயாமல் பரப்புரை செய்யும் பக்தர்கள் இது பற்றி எப்போதாவது கேட்டிருக்கிறார்களா? சிந்தித்திருப்பார்களா?

தனது படம் வெளியாகும் போது மட்டுமே தலைவருக்கு பக்தர்களின் நினைவு வரும். கடமையை செய் பலனை எதிர்பார் என்பார். என்ன கடமை? போஸ்டர் ஒட்டி ஆர்ப்பாட்டமாக அவரின் படத்தை அதிகமுறை பார்ப்பது. பக்தர்கள் அதனை கச்சிதமாக செய்வார்கள். பலன்?

ராகவேந்திரா மண்டபத்தில் கடமையை செய் பலனை எதிர்பார் பேனருடன் தலைவர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டி தந்த நிர்வாகிகள், தலைவர் அரசியலுக்கு வருவார், அதைத்தான் பலனை எதிர்பார் என்று சொல்கிறார் என்றனர். தலைவரும் அப்படியொரு அர்த்தத்தில் பக்தர்களை டெம்ப்ட் செய்யவே அந்த பேனரை வைத்தார். படம் ஓடியது, கல்லா நிறைந்தது. பலன்? எந்த பக்தராவது தலைவரிடம் அதுபற்றி கேட்டிருக்கிறார்களா?

தலைவரின் மகளின் திருமணத்துக்கு பக்தர்களுக்கு அழைப்பில்லை. போகட்டும். ட்ராபிக் ஜாம் ஆகிவிடும் அந்தப் பக்கம் வராதீங்க என்று அறிவிக்க வேண்டுமா? அதேநேரம் பாபா படப்பெட்டியை கடத்திய விவகாரத்தில் பக்தர்களை புரட்டி எடுத்த பாமக தலைவர்களை வீடு தேடிச் சென்று அழைப்பிதழ் தந்து அழைத்தார் தலைவர். பக்தர்களில் யாராவது ஏன் என்று கேட்டார்களா? சில பத்திரிகைகள் இதனை கோடிட்டு காட்டியதும், ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்றார். குஸ்காகூட இன்னும் வந்து சேரவில்லை.

இவ்வளவுக்குப் பிறகும் கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திப்பேன் என்று அதே பழைய துருப்பிடித்த தூண்டிலைதான் தலைவர் வீசுகிறார். பக்தர்களும் படத்தை வெற்றிபெற வைக்கும் நேர்த்திக்கடனுடன் வெங்கடாசலபதிக்கு முடி தானம் செய்ய கிளம்பிவிட்டனர்.

தலைவரைப் பொறுத்தவரை பக்தர்களுக்கு பிரியாணியெல்லாம் போட வேண்டியதில்லை, வீண் செலவு. வெற்றி விழாவில் சந்திப்பேன், பிரியாணி போடுவேன் என்று வாய் வார்த்தையில் அடித்துவிட்டாலே போதும். அப்புறம் கவிப்பேரரசை வைத்து தமிழ்ப்பால், வியர்வை, ஒரு பவுன் தங்கக் காசு என்று இரண்டு வரி. பக்தர்கள் பணால். தமாஷ் என்னவென்றால் தலைவரைப் போன்ற வெள்ளந்தி மனிதருக்கு சாக்கடை அரசியல் செட்டாகாது என்று கமெண்ட். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் தந்து நிறைவேற்றாமல் எஸ்ஸாகும் கட்சிக்காரனைப் போலத்தானே, ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ஏதாவது வாக்குறுதி தந்து எஸ்ஸாகும் தலைவரும்.

தனிப்பட்ட முறையில் தலைவர் பலருக்கு உதவியிருக்கிறார். தனக்கு படம் தந்தவர்கள், கைதூக்கிவிட்டவர்கள், நண்பர்கள்... இதெல்லாம் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கர் தொடங்கி விஜய் சேதுபதிவரை செய்கிற, செய்து வருகிற தனிப்பட்ட விஷயங்கள். அதில் தலைவரை மட்டும் தனித்துவப்படுத்தி பேச எதுவுமில்லை.

இதற்கு மேலும் மண் சோறு தின்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் பக்தர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் எங்க தலைவரைப் போல வள்ளல் உண்டா, தன்னலம் கருதா தலைவர் உண்டா என்று மட்டும் கோஷமிடாதீர்கள். காதில் தேள் வந்து பாயுற மாதிரி இருக்கு.

ஞாபகசக்தியைப் பெருக்க வழிகள்

மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம்தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நமது ஞாபகசக்தியையும், மூளைத்திறனையும் பெருக்க மூளையை சரிவரக் கவனித்து, அதற்கு போதுமான போஷாக்கை அளிக்க வேண்டும்.
சிலவேளைகளில் மூளைக்கு மருந்து கொடுப்பதும் அவசியமாகலாம். மூளைத்தளர்ச்சி என்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. குளூக்கோஸ், மூளைக்கு முக்கியமாக போஷாக்கு அளிக்கும். மூளை களைப்பு அடைவதைத் தடுக்க சில அமினோ அமிலங்களும் அவசியம்.
மூளை வேலையின்போது வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு சில பொருட்கள் அவசியம். குளுடாமினிக் அமிலம், மெதியனைன், வைட்டமின் பி-1, பி-2, பி-6 ஆகியவை அந்தப் பொருட்களாகும். மத்திய நரம்பு மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு சரியான உழைப்பு முறையும், உள்ளத் தூண்டல்களும்கூட அவசியமாகும்.
ஒருவரைப் பெரிதும் களைப்படையவும், சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு அல்ல, குறைவான உழைப்பே என்பது உண்மை. இரவு நேரத்தில், குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக உள்ளது.
அவனது இயக்கங்களும் மிகவும் மந்தமடைகின்றன. அந்த நேரத்தில் கணிதப் பணியில் அவன் ஈடுபட்டால் பல தவறுகள் நேரக்கூடும். அதேபோன்று பகலிலும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பலவீனமான நேரம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலை 8 மணியில் இருந்து 12 மணி வரையும், மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையும் மனிதனின் திறமைகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூளை உழைப்பின் தீவிரமும் வேலை நேரத்தில் மாற்றமடையக் கூடும்.
ஆரம்பத்தில் 20 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்கள் வரை மனிதன் தான் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்பத்தன்னை தகவமைத்துக்கொள்கிறான். மிகத் தீவிரமான உழைப்புக்குப் பிறகு சோர்வு தட்டுப்படத் தொடங்குகிறது. தீவிரமான வேகத்துடன் மூளையால் எந்த நேரத்தில் பணிபுரிய முடிகிறதோ, அந்த நேரத்தை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அந்த நேரம் அதிகம் கிடைப்பதில்லை. எனவே அந்நேரத்தில் நமது கவனத்தை அங்குமிங்கும் அலைய விடக்கூடாது. அப்போது வேறு வேலையையும் மேற்கொள்ளக்கூடாது. சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதன் மூலம் ஒரு மனிதனின் திறனை அதிகரிக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இசை, பல்வேறு வண்ணங்கள் போன்ற தூண்டல்கள் இதமளிக்கக்கூடும். சிலருக்கு எரிச்சலூட்டவும் கூடும். சிலருக்கு வேலையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டும் அவை, வேறு சிலருக்கு கவனக்குறைவை ஏற்படுத்தக்கூடும். அவை, அந்தந்த நபரின் தனிப்பண்புகளைப் பொறுத்தவை.
இதெல்லாம் தனிப்பட்ட நபரின் ரசனை சார்ந்தது என்பதால் நம்மால் பொதுவாக எதுவும் கூற முடியாது. எரிச்சல் ஏற்படும் சூழ்நிலையில் உங்களை இதப்படுத்த இசை அல்லது வண்ணங்கள் அல்லது வேறு என்ன தேவை என்று நீங்களே அறிந்து கொள்ள வேண்டும்.
மூளையும் உடம்பும் களைத்திருக்கும் போது உற்சாகமூட்டும் இசைப் பாடல்கள் அல்லது சிவப்பு சார்ந்த வண்ணங்கள் பயனளிக்கும். மீண்டும் நினைவுகூர்தல் அல்லது கற்றலே ஞாபகசக்தியின் அடிப்படை.
அன்றாடம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை படுக்கைக்குப் போகும் முன்பும், படுக்கையிலிருந்து எழுந்தபின்பும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது பலனளிக்கும். அதோடு, நினைவில் கொள்ள வேண்டிய விஷயத்தோடு அது தொடர்பான இன்னொன்றை ஞாபகத்தில் இருத்துவது நல்ல பலன் கொடுக்கும்.

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.
ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.
ஆண்மைக்கு ரோஜா குல்கந்து காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும்.
இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.
இனிமையான உறவுக்கு இலுப்பை பூ இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.
குழந்தை வரத்திற்கு ஆலம்பழம் சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும்.
பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.
48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

மினி ரவை ஊத்தாப்பம்

காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டால், அப்போது உடனே ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், ரவை ஊத்தாப்பம் செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் அந்த அளவில் இதனை விரைவில் செய்யலாம்.
மேலும் பலருக்கு இந்த ரெசிபியானது விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். பேச்சுலர்கள் கூட இதனை விடுமுறை நாட்களில் முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த மினி ரவை ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு 3-4 நிமிடம் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு குளிர வைத்து, ஒரு பௌலில் போட்டு, தயிர், இஞ்சி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

30 நிமிடம் ஆன பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி ரவை மாவை ஊற்றி, லேசாக தேய்த்து, பின் அதன் மேல் வெங்காய கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் கழித்து, கவனமாக திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் மினி ஊத்தாப்பமாக சுட்டு எடுக்க வேண்டும்

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் உணவுகள்!!!

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் அதிகம் வாந்தி எடுப்பதால், பெண்களால் சரியாக உணவுகளை சாப்பிட பிடிக்காது.
மேலும் சிலருக்கு புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருப்பதால், இரத்தமானது சுண்ட ஆரம்பிக்கும். ஆகவே இக்காலத்தில் பெண்களின் உடலில் இரத்தத்தின் அளவானது குறைய ஆரம்பித்து, இரத்த சோகையானது வர ஆரம்பிக்கும்.
இப்படி கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வந்தால், அது குழந்தைகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இங்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வருவதைத் தடுக்கும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டால், கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக்கும்.
பேரிச்சம் பழம் கர்ப்பிணிகள் தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியானது அதிகரித்து, இரத்தத்தின் அளவானது அதிகரிக்கும்.
ஓட்ஸ் கர்ப்பிணிகள் ஓட்ஸ் சாப்பிட்டால், அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை அதிகரிக்காமல் இருப்பதுடன், இரத்த சோகை வராமலும் தடுக்கும்.
உலர் திராட்சை உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
ப்ராக்கோலி கர்ப்பிணிகளுக்கு ப்ராக்கோலி ஒரு சிறப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். இதனால் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதுடன், கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
வாழைப்பழம் இரத்த சோகை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
மாதுளை இரத்த சோகையை தடுப்பதில் மாதுளையை விட சிறந்த பொருள் வேறு ஏதும் இல்லை. ஏனெனில் மாதுளையில் மற்ற பழங்களை விட அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கிறது. ஆகவே இரத்த சோகை வராமல் இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு மாதுளையை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும்.

அதிகமா வியர்குதா? அதை தடுக்க இதோ சில வழிகள்!!!

எப்போதும் அதிகமாக வியர்த்தால், அது மிகுந்த சங்கடமான நிலையை ஏற்படுத்தும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே பலர் வியர்வை துர்நாற்றம் வெளிவராமல் இருப்பதற்கு, பலர் டியோடரண்ட் அடித்துக் கொள்வார்கள்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த வியர்வையானது டியோடரண்ட்டின் நறுமணத்தை போக்கி, துர்நாற்றத்தை அதிகமாக்கிவிடும். அதுமட்டுமின்றி, பலருக்கு வியர்வையினால் ஆடைகளின் மேல் பல ஓவியங்கள் போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இதனைப் பார்க்கும் போதே, நமக்கு வெட்கமாக இருக்கும். இத்தகைய வியர்வை பிரச்சனைக்கு தீர்வு இல்லையா என்று பலர் ஏங்குவதுண்டு. அத்தகையவர்களுக்காக, தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில இயற்கை நிவாரணிகளைக் கொடுத்துள்ளது. அதன்படி செய்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது அக்குளில் தடவி படுத்தால், அதிகமாக அக்குள் வியர்ப்பதைத் தடுக்கலாம்.
இல்லாவிட்டால், தினமும் காலையில் குளிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் அக்குளில் தடவி, பின் குளித்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம். இருப்பினும் இரவில் பயன்படுத்தினால் தான் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அக்குள் வியர்க்காமல் வறட்சியுடன் இருப்பதை நன்கு காணலாம்.
கார்ன் ஸ்டார்ச் அக்குளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சிறிது கார்ன் ஸ்டார்ச் தடவினால், அது அக்குளில் உள்ள அதிகப்படியான ஈரப்பசையை உறிஞ்சி, வியர்வை துர்நாற்றம் வருவதைத் தடுக்கும்.
குறிப்பாக இப்படி செய்யும் போது அடர் நிறம் கொண்ட ஆடைகளை உடுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது நன்கு வெளிப்படும்.
எலுமிச்சை எலமிச்சைக்கு அதிகமாக வியர்ப்பதை தடுக்கும் சக்தி உள்ளது. அதற்கு எலுமிச்சை துண்டை அக்குளில் தடவி தேய்த்து, கழுவ வேண்டும். இதனால் வியர்ப்பது குறைவதுடன், அக்குள் கருமையும் நீங்கும்.
காட்டன் ஆடைகள் காட்டன் ஆடைகளை உடுத்தினால், அது அதிகப்படியன வியர்வையை உறிஞ்சி, அக்குளில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.
காரமான உணவுகளைத் தவிர்க்கவும் அதிகமாக வியர்ப்பதற்கு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உண்பது தான. ஆகவே காரமான உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக அதிகமாக வியர்க்கும் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

பெண்களே! உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...

பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா? அது உங்களின் அழகையே கெடுக்கிறதா? இதனைப் போக்க அழகு நிலையங்களுக்கு செல்ல சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்படியானால் வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள்.
ஆம், எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.
சருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்!!!
அதிலும் கோடை ஆரம்பித்துவிட்டது. பலருக்கு வெளியே செல்லவே மிகுந்த கடுப்பாக இருக்கும். ஆகவே அப்போது அழகு நிலையங்களுக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு எப்படி உதட்டின் மேலே வளரும் தேவையற்ற முடியை போக்குவது என்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில சூப்பர் டிப்ஸ்...
அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு முயற்சி செய்து பாருங்கள். இதனால் எந்த பக்கவிளைவும் இல்லாமல், உதட்டின் மேலே உள்ள முடியைப் போக்கலாம். சரி, அந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!
மஞ்சள் தூள் பெண்களின் உதடுகளுக்கு மேல் வளரும் தேவையற்ற முடியைப் போக்குவதில் மஞ்சள் சிறந்த பொருளாக உள்ளது.
ஆகவே மஞ்சள் தூளை பாலில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, உலர வைத்து, பின் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு மாதத்திற்கு செய்து வந்தால், உதடுகளுக்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சி நாளடைவில் நின்றுவிடும்.
எலுமிச்சை தேவையற்ற முடியை எலுமிச்சையைப் பயன்படுத்திக் கூட நீக்கலாம். அதற்கு எலுமிச்சை சாற்றில் சர்க்கரை மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதனை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டை முட்டையின் வெள்ளைக் கருவில் சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி உலர வைத்து உரித்து எடுக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர, நாளடைவில் முடியின் வளர்ச்சி நின்றுவிடும்.
கடலை மவு கடலை மாவில், பால் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ம் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்தால், உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியானது குறைந்துவிடும். அதிலும் இதனை வாரத்திற்கு 2 முறையாவது செய்து வர வேண்டும்.
சர்க்கரை ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு கிளறி, பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி 1 நிமிடம் கிளறி இறக்கி, குளிர வைத்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, அதன் மேல் ஒரு காட்டன் துணியை வைத்து, மேலும் கீழும் தேய்த்து, பின் அதனை கீழிருந்து மேலாக உடனே இழுக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலை நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவு


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கு சராசரியாக ரூ.10 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும், மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் எனறு தேர்தல் ஆணையர் சமபத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரபிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறவுள்ள, சட்டமன்ற தேர்தலுக்காக ரூ.1,000 கோடி செலவாகும் என்றும் கூறினார். மேலும், இந்தத் தேர்தலில் வேட்பாளர் செலவு, பெரிய மாநிலங்களில் ரூ.70 லட்சமாகவும், சிறிய மாநிலங்களில் ரூ.54 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காரைக்குடி சிக்கன் (karaikudi chicken)

தேவையான பொருட்கள்:
சிக்கன் 
வெங்காயம் 
தக்காளி 
பச்சைமிளகாய் 
இஞ்சி 
கருவேப்பிலை 
கொத்தமல்லிதழை
அரைக்க:
பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் -6 
மிளகு -2ஸ்பூன் 
சோம்பு 
காய்ந்தமிளகாய் -10 
கொத்தமல்லிவிதை -2ஸ்பூன் 
சீரகம் 
தேங்காய் 
உப்பு 
எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயில் காய்ந்தமிளகாய் ,கொத்தமல்லிவிதை ,சீரகம்,மிளகு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் ,கருவேப்பிலை சேர்த்து வறுத்து அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து கொள்ளவும். 
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும். 
மற்றொரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு,கருவேப்பிலை தலித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 
அதனுடன் சிக்கன் சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு,சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும் . 
சிக்கன் நன்றாக வெந்ததும் அதனுடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லிதழை, கருவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவையான காரைக்குடி சிக்கன் ரெடி .இதை இட்லி,மெதுமெது தோசை ,நெய் சோறுடன் சாப்பிட அருமையாக இருக்கும் .

கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான காரணங்கள்!!!

திருமணமான தம்பதியர்கள் எவ்வளவு தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருசில சண்டைகள் அன்றாடம் வரத் தான் செய்கிறது. இதற்காக அவர்களுக்குள் காதலே இல்லை என்று அர்த்தமில்லை. நாள் முழுவதும் அன்பாக நடந்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது என்று அர்த்தமில்லை.
சிறுசிறு சண்டைகளும் இருந்தால் தான், வாழ்க்கையானது சுவாரஸ்யமாக செல்லும். அப்படி திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள்.

அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும்.
மேலும் தம்பதியர்கள் போடும் சண்டைகள் அனைத்தும் எதிர்பார்ப்புக்கள், அதிகப்படியான அன்பு மற்றும் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களால் தான் வருகிறது.

இங்கு கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான சில பொதுவான விஷயங்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றில் நீங்கள் எதற்காக அன்றாடம் சண்டை போடுவீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாமியார், நாத்தனார்

வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு முதன்மையான காரணம் மாமியார். இந்த மாமியார் பிரச்சனையை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சந்திக்கின்றனர். இந்த காரணம் தான் பெரும்பாலான வீடுகளில் சண்டை வருவதற்கு முதன்மையாக உள்ளது.

போதிய நேரம் செலவழிக்காதது

திருமணமான தம்பதிகள் சண்டைகள் போடுவதற்கு மற்றொரு காரணம் தான் இது. இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், நிறைய தம்பதிகளால் ஒருவருடன் ஒருவர் போதிய நேரத்தை செலவழிப்பதில்லை என்று சண்டைப் போடுகின்றனர்.

சுத்தமின்மை

இன்றைய காலத்தில் நிறைய தம்பதிகளுக்கு சண்டை வருவதற்கு சுத்தமின்மையும் ஒரு காரணம். அதிலும் படுக்கையில் துணியை அப்படியே போடுவது, காலையில் எழுந்ததும் பயன்படுத்திய போர்வையை மடிக்காமல் அப்படியே போட்டுவிடுவது போன்றவற்றால் கூட சண்டைகள் வருகின்றன.

ரொமான்ஸ் இல்லாமை

 தம்பதியர்களுள் ஒருவர் ரொமான்ஸாக அருகில் வரும் போது, புரிந்து கொண்டு, ரொமான்ஸ் செய்யாமல், சோர்வாக உள்ளது என்று சொல்லி, அவர்களை புறக்கணிப்பதால், தற்போது பலருக்கு சண்டைகள் வருகின்றன.

அளவுக்கு அதிகமான அன்பு

அளவுக்கு அதிகமாக அன்பு அதிகரிக்கும் போது, துணை தம்மிடம் சிறிது கோபமாக நடந்து கொண்டாலும், அவரின் மீது கோபம் அதிகரித்து, புரிந்து கொள்ளும் திறன் குறைந்து சண்டைகள் வந்துவிடும்.

குழந்தைகளைப் பராமரிப்பது

சில நேரங்களில் குழந்தைகளை கவனித்து கொள்வதிலும் சண்டைகள் வரும். அதில் பெரும்பாலான ஆண்கள் குழந்தைகளை கவனிப்பது பெண்களின் பொறுப்பு என்று நினைக்கின்றனர். ஆனால் பெண்களோ, கணவன், மனைவி இருவருமே சரிசமமாக கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி இருக்க, தம்பதியர்களுக்குள் சண்டைகள் எழும்.

Thursday 27 March 2014

நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா ? இதை கடைபிடியுங்கள்

நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரம்மாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.
நாம் ஏன் சில எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக் கூடாது? இதன் மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும் அல்லவா?
இந்த கட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழிமுறைகளை கொடுத்துள்ளோம்.
மூளைக்கு மீன் வேண்டும்
ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள சாலமன் அல்லது மக்கெரல் போன்ற எண்ணைய் மிகுந்த மீன்களை வாரந்திர உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மூளை சுருங்குவதை குறைக்க முடியும். நாம் 3 வயதை அடையத் தொடங்கிய நாள் முதல், மூளையின் அளவு சுருங்கத் தொடங்கி, மன ரீதியாக தளர்வு ஏற்படத் தொடங்கும்.
நண்பர்களை அருகில் வைத்திருங்கள்
'நல்ல நண்பர்களை அருகில் வைத்திருப்பது தான் 100 வயது வரை வாழ்வதற்கான சாவி' என்று ஆஸ்திரேலியாவில் 100 வயதை அடைந்தவர்களிடம் செய்த ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது. ஏனெனில், நண்பர்கள் மன ரீதியான ஆதரவை அளிப்பதால், மன அழுத்தத்தில் இருக்கும் நபர்களின் உடலில் நன்றாக இருப்பதற்கான வேதிப்பொருட்களான டோபாமைன் மற்றும் ஆக்ஸிடோசின் ஆகியவை உருவாக உதவுகிறது. மேலும், இதன் காரணமாக மூளையின் வளர்ச்சி மேம்பட்டு, முதுமையும் தள்ளிப் போகிறது.
ஒரு நாளைக்கு 2 ஆப்பிள்கள்
ஆப்பிள்கள், குறிப்பாக ஆப்பிள் சாறு மூளையை இளமையாக வைத்திருக்க உதவுகிறது என்று அல்சைமர் நோய் பற்றிய பத்திரிக்கை (Journal of Alzheimer's Disease) நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 2 கப் ஆப்பிள் சாறு அருந்துவதன் மூலம் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளைகளில் ஏற்படும் கறைகள் குறைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!!
மூளைக்கு வேலை
சுடோகு மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவற்றை செய்து வருவதால் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்
சருமத்திற்கு காய்கறிகளும், பழங்களும்
வானவில்லின் வர்ணங்களில் ஜொலிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், மஞ்சள், பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. செயின்ட் ஆண்டுரூஸ் பல்கலைக்கழகத்தினரால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு காய்கறிகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நெடு நாட்களுக்கு ஆரோக்கியமான சருமம் இருப்பதாகவும் மற்றும் அவை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வாரம் இருமுறை தாம்பத்ய உறவு
இராயல் எடின்பர்க் மருத்துவமனை நடத்திய ஆய்வு ஒன்றின் படி, ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை (வாரம் இரண்டு முதல் மூன்று முறை உடலுறவு கொள்ளுதல்) வாழ்ந்து வரும் தம்பதிகள், மற்றவர்களை விட 7 வயது குறைந்தவர்களாக தோற்றமளிக்கிறார்கள். ஏனெனில், தாம்பத்ய உறவு மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் இரவில் ஆழ்ந்த உறங்கவும் உதவுகிறது.
கருப்பைக்கு பால் அவசியம்
முழுமையான கொழுப்பு நிரம்பிய பாலை தினமும் குடித்து வந்தால் போதும், பெண்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மை 25 சதவீதம் குறைந்துவிடும் என்று ஹார்வார்டு பல்கலைக்கழகம் செய்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஏனெனில், பால் பொருட்களில் உள்ள கொழுப்பு கருப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். காலை நேர உணவுடன், ஒரு கப் பாலை தினமும் சேர்த்துக் கொள்வதும், ஒரு கப் தயிர் மற்றும் பாலாடைக்கட்டியில் ஒரு சிறு துண்டு ஆகியவற்றையும் உணவுடன் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
பெண்களின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சியிலும் மற்றும் அவர்களுடைய கருத்தரிக்கும் தன்மையை குறைப்பதற்கும் மன அழுத்தம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியாகும் அளவை குறைத்து, லிபிடோவையும் குறைத்து விடுகிறது. எனவே, இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள, தினமும் 10 நிமிடமாவது ரிலாக்ஸாக டிவி பார்த்தல் அல்லது படித்தல் போன்ற பொழுதுபோக்குகளை செய்து வாருங்கள்.
தொப்பை
சாதாரணமாக உடற்பயிற்சி செய்வதை விட, இசையை கேட்டுக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் போது கணிசமான அளவு எடை அதிகமாக குறைகிறது என்று கனடாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உங்களுடைய உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இசையை சேர்த்துக் கொண்டு, அதீத சக்தி தரும் பாடல்களை iPod அல்லது mp3 பிளேயரில் போட்டுக் கேளுங்கள். மேலும், நீங்கள் ஜிம்முக்கு செல்பவராக இருந்தால் அல்லது வாக்கிங் மட்டும் செல்பவராக இருந்தால், பாட்டு கேட்டுக் கொண்டே அவற்றை செய்யுங்கள்.
பொட்டாசியம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்
பொட்டாசியம் உடலின் நீர்மத்தை சமநிலை செய்யவும் மற்றும் தேவையற்ற வகையில் வயிறு உப்புசமடைவதையும் குறைக்க உதவுகிறது. அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுகளாக வாழைப்பழம், பரங்கிக்காய், மாம்பழம், கீரைகள், தக்காளி, நட்ஸ் மற்றும் தண்ணீர்விட்டான் கொடி ஆகியவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இவற்றில் உள்ள அஸ்பாரகின் என்ற அமினோ அமிலம், நமது உடலில் அதிகமாக உள்ள நீர்மங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை செய்கிறது.
ஓய்வு தேவை
யோகாசனம் அல்லது தியானம் போன்ற ஓய்வு நிலை உடற்பயிற்சிகள், கடினமான உடற்பயிற்சிகளான ஓட்டம் அல்லது ஜிம் உடற்பயிற்சிகள் போன்றவற்றை விட அதிகமான கலோரிகளை எரிப்பதாக அமெரிக்காவிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த எளிய உடற்பயிற்சிகள், நம்மை அதிகமாக சாப்பிடத் தூண்டும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவை குறைத்திட உதவுகின்றன.
பாதத்திற்கேற்ற பந்து சிகிச்சை (Try ball therapy)
ஒரு டென்னிஸ் பந்தின் மேலாக உங்களுடைய பாதத்தை வைத்து, சுழற்றிக் கொண்டிருந்தால் பாதம் மசாஜ் செய்யப்பட்டு, இரத்த ஓட்டம் உந்தப்படும் மற்றும் இறுக்கமான அல்லது வலி தரும் வகையில் உள்ள தசைகள் ஓய்வு நிலைக்கு திரும்பும். இன்னும் சற்றே தீவிரமான பலன் வேண்டுமென்றால், கோல்ஃப் விளையாடும் பந்தை எடுத்துக் கொண்டு, நின்ற நிலையில் இதே செயலை செய்யவும். இதனை தினமும் திரும்பத் திரும்ப செய்து வந்தால், பிளான்டர் பேஸ்சியா என்ற மிகவும் பரவலான ஆனால் மிகவும் வலி தரக்கூடிய எரிச்சல் தரும் நிலையிலிருந்து உங்களுடைய பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கண்களுக்கும் தேவை நிழல்
நீங்கள் எவ்வளவு அதிகமாக சூரியனின் புறஊதாக் கதிர்களால் நேரடியாக தாக்கப்படுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய கண்களிலுள்ள விழித்திரையில் அதிகமான சேதம் ஏற்படும். இதன் காரணமாக உங்களுக்கு வயது ஏற ஏற, கண்புரை மற்றும் வயது-சார்ந்த மாகுலர் திசு-செயலிழப்பு (AMD) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெளியிடங்களில் நேரத்தை செலவிடும் போது சூரியஒளிக் கண்ணாடிகளை அணியுங்கள். குளிர்காலங்களிலும், மேக மூட்டமாக இருக்கும் நேரங்களிலும் கூட புறஊதாக் கதிர்களின் தாக்கம் இருக்கும்.
நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க...
கண்களுக்கான தினசரி பயிற்சிகள்
இங்கு தரப்பட்டுள்ள எளிமையான டெக்னிக்கை பயன்படுத்தி உங்களுடைய கண் தசைகளுக்கு பயிற்சியளித்து வந்தால், கண்களிலுள்ள அழுத்தம் குறைந்து தலைவலி மற்றும் கண் வலி போன்றவை குறையும்.
இதோ அந்த பயிற்சி:
உங்களுடைய கண்களுக்கு முன், 10 அடி தூரத்தில் பெரிய அளவில 8 என்ற எண் உள்ளதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த எண்ணை ஒரு பக்கமாக சாய்த்து, அந்த வடிவத்தை உங்களுடைய கண்களால் வரைய முயற்சி செய்யுங்கள், மெதுவாக. இவ்வாறு சில நிமிடங்களுக்கு செய்து வரவும்.
மூக்கு
நீங்களாகவே செய்யக்கூடிய இந்த வழிமுறையைப் பயன்படுத்தி சைனஸ் அழுத்தம் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் காணுங்கள். எப்படியெனில் உங்களுடைய நாக்கை அதன் மேல் பகுதியை எதிர்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து, கண்ணிமைகளில் ஒற்றை விரல் கொண்டு அழுத்தவும். மூக்கின் துவாராங்கள் வழியாக வாய்க்கு செல்லும் வோமர் எலும்பில், அடைப்புகளை இலக்கி, நீக்க இந்த வழிமுறை உதவும்.அதிலும் 20 நொடிகள் இவ்வாறு செய்து பாருங்கள், சைனஸ் தொல்லை இல்லாமல் போகும்.
'சத்தங்களுக்கு தேவை கட்டுப்பாடு'
நாம் பிறக்கும் போது இயக்கம் பெறும் காதுகள், கடைசி வரையிலும் நம்முடைய பிரதான உணர்வு உறுப்பாக உள்ளது. வயது ஏற ஏற, நமது மூளைக்கு ஒலியை கொண்டு செல்லும் நரம்புகள் சேதமடையவும், பலவீனமாகவும் துவங்குகின்றன. எனினும், நாம் கேட்கும் ஒலியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், இந்த சேதத்தின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும். அதாவது, அமைதியை விரும்புங்கள்.
கிரீன் டீக்கு கிரீன் சிக்னல்
வாயில் ஒலியை ஏற்படுத்தவும், உணவை அரைக்கவும், முகத்தின் அமைப்பை உருவாக்கவும் உதவும் 32 நண்பர்களை பாதுகாக்க விரும்பினால், தினமும் கிரீன் டீ குடியுங்கள். கிரீன் டீ பாக்டீரியாக்களை தடுக்கவும், உங்களுடைய பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
ப்ளாஸிங் செய்யுங்கள்
தினமும் ப்ளாஸிங் செய்வது கடினமான விஷயமாக உங்களுக்குத் தோன்றினால், அது ஒன்றும் குடி முழுகிப் போய்விடும் விஷயம் என்று கவலை கொள்ள வேண்டாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ப்ளாஸிங் செய்து வாருங்கள். இந்த பழக்கத்தின் காரணமாக கிருமிகள் வாயில் தொற்றி ஒட்டிக் கொள்ளாமல் தவிர்க்க முடியும். இதன் மூலம் ஈறுகளில் நோய்கள் தாக்காமலும் தவிர்க்க முடியும்.
சீக்கிரம் படுக்கைக்கு செல்லுதல்
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணி நேரங்கள் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணி நேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச் சென்றால், அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய வலி போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
'நான் செய்வேன்' என்று சொல்லுங்கள்
திருமணம் ஆகாத ஆண்களை விட, திருமணமானவர்கள் தான் இதய நோயினால் மூன்று மடங்கு அதிகமாக இறக்கிறார்கள். அதே நேரம், திருமணமான பெண்கள் இதய நோயினால் இறப்பது, திருமணமாகாதவர்களை விட 50 சதவீதம் குறைவு என்றும் 2009 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு சொல்கிறது.
சமநிலையை மேம்படுத்துங்கள்
உங்களுடைய மூட்டுகளை நெகிழக் கூடியவையாகவும் மற்றும் உறுதியாகவும் வைத்திருக்க விரும்பினால், ஒவ்வொரு நாள் காலையிலும், ஒவ்வொரு பாதத்தையும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு சமநிலையுடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த எளிய பயிற்சி, உங்களுடைய கால்களின் தசைகளை வலுப்படுத்தவும், அவற்றின் உணர்வுகளை மேம்படுத்தவும், நிலைத்தன்மை மற்றும் வயதாகும் போது கீழே விழாமல் தவிர்க்குமாறும் செய்ய உதவுகிறது.
சத்தாக சாப்பிட்டு வீக்கத்தை வற்றச் செய்யுங்கள்
மூட்டுகள் இணையும் இடத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தி ஆர்த்ரிடிஸ் நோயை வரவழைக்கும் வேலையை வீக்கங்கள் செய்கின்றன. இவ்வாறு வீக்கத்தை வரவழைக்கும் காரணிகளை எதிர்த்துப் போராடும் உணவுகளான கிரீன் டீ, பெர்ரிகள், கொழுப்புச்சத்து மிகுந்த மீன்கள், சுத்தமான ஆலிவ் எண்ணெய், சிவப்பு திராட்சைகள் மற்றும் ஆப்பிள்கள், பூண்டு, வெங்காயம், ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகள், மஞ்சள் மற்றும் இஞ்சி போன்றவற்றை சாப்பிட்டு, வீக்கத்திற்கு சொல்லுங்கள் பெரிய 'NO'.