Saturday 29 March 2014

காரைக்குடி சிக்கன் (karaikudi chicken)

தேவையான பொருட்கள்:
சிக்கன் 
வெங்காயம் 
தக்காளி 
பச்சைமிளகாய் 
இஞ்சி 
கருவேப்பிலை 
கொத்தமல்லிதழை
அரைக்க:
பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் -6 
மிளகு -2ஸ்பூன் 
சோம்பு 
காய்ந்தமிளகாய் -10 
கொத்தமல்லிவிதை -2ஸ்பூன் 
சீரகம் 
தேங்காய் 
உப்பு 
எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயில் காய்ந்தமிளகாய் ,கொத்தமல்லிவிதை ,சீரகம்,மிளகு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் ,கருவேப்பிலை சேர்த்து வறுத்து அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து கொள்ளவும். 
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும். 
மற்றொரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு,கருவேப்பிலை தலித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 
அதனுடன் சிக்கன் சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு,சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும் . 
சிக்கன் நன்றாக வெந்ததும் அதனுடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லிதழை, கருவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவையான காரைக்குடி சிக்கன் ரெடி .இதை இட்லி,மெதுமெது தோசை ,நெய் சோறுடன் சாப்பிட அருமையாக இருக்கும் .

No comments:

Post a Comment