Tuesday 9 July 2013

எமர்சன் எனும் தலைசிறந்த தத்துவ அறிஞரின் பொன்மொழிகள்



















 .
* நீங்கள் கோபப்படுகிற ஒவ்வொரு நிமிடமும் அறுபது நொடி இன்பத்தை இழக்கிறீர்கள்.

* உங்களை ஓயாமல் மாற்றிவிட முயற்சிக்கும் உலகத்தின் முன் உங்கள் சுயத்தை தக்கவைத்துக்கொள்வதே பெருஞ்சாதனை.

* உங்களுக்கு பின்னும், உங்களுக்கு முன்னும் இருக்கும் எவையும் பெரிய விஷயங்களே இல்லை. உங்களுக்கு உள்ளிருக்கும் ஆற்றல்தான் உலகின் மிகப்பெரிய அற்புதம்.

* எதை செய்ய அஞ்சுகிறீர்களோ, அதையே எப்பொழுதும் செய்யுங்கள்.

* உங்களைத் தவறாக உலகம் புரிந்துகொள்கிறது என அவமானமாக உணராதீர்கள். பிதாகரஸ், சாக்ரடீஸ், கலிலியோ, கோப்பர்நிக்கஸ், நியூட்டன், லூதர் கிங் என்று உலகின் பெருமனிதர்கள் எல்லாரும் தவறாகவே உணர்ந்து கொள்ளப்பட்டு காயப்படுத்தப்பட்டார்கள். உயர்ந்தவர் ஆக தவறாக புரிந்துக்கொள்ளப்படுவது அவசியம்.

* எல்லாரும் சென்ற பாதையில் பயணிக்காதே, யாரும் பயணிக்காத பாதையில் பயணித்து உன் சுவடுகளை விட்டுப் போ.

* நம்மின் மாபெரும் பெருமை எப்பொழுதும் தோற்காமல் இருப்பதில் இல்லை; ஒவ்வொரு முறை வீழ்கிற பொழுதும் அயராது கம்பீரமாக எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது.

* வாழ்க்கை ஒரு இடையறாத பயணம்; அது வெறும் இலக்கு அல்ல.

* மகிழ்ச்சியாக வாழ்வது வாழ்க்கையின் நோக்கமில்லை; பயனுள்ளதாக, மதிப்புமிகுந்ததாக, அன்பால் நிறைந்ததாக அந்த வாழ்க்கை அமையட்டும். வெறுமனே வாழ்வதற்கும் நன்றாக வாழ்வதற்கும் உள்ள வேறுபாடு இதுவே.
 
* வாழ்வின் நீளம் முக்கியமில்லை; ஆழமே முக்கியம்

 நன்றி ஆ.வி

No comments:

Post a Comment