Saturday 17 May 2014

மனைவிமார்கள் கணவனை எதற்கு அடிக்கிறாங்கனு தெரியுமா?.... நகைச்சுவைக்கு மட்டும்!..

மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க?
கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்...
மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்...
(வாசலில் சென்ற மனைவி.....)
மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்.....
(பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...)
மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...?
கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இப்போத்தான் உன் பாசம் எனக்கு புரிஞ்சதுமா....
மனைவி : ஆமாங்க....உங்களை எல்லாம் அடிக்கனும்னு எங்களுக்கு என்ன ஆசையா? பொண்ணுங்க நாங்க தைரியமா, பிரச்சினை வரும்போது சமாளிக்கத்தான், அப்பப்போ கணவன்மார்களை அடிச்சு ஒத்திகை பார்த்துக்குறோம்.... வேற எங்க போயி யாரை அடிக்க முடியும்,கோவம் இருக்குற எடத்துலதாங்க பாசமும் இருக்கும் .. இத புரிஞ்சுக்காம பொண்டாட்டினாலே ஏதோ அடிக்கறதுக்கு பொறந்தா மாதிரி எல்லா ஆம்பிளைகளும் நினைக்கிறாங்க..

No comments:

Post a Comment